» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
அந்தோணியார்புரம் சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க கோரிக்கை!
புதன் 31, ஜூலை 2024 4:50:54 PM (IST)
தூத்துக்குடியில் வெள்ளத்தால் சேதம் அடைந்துள்ள அந்தோணியார்புரம் சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்று எம்பவர் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக எம்பவர் இந்தியா நுகர்வோர் கல்வி & சுற்றுச்சூழல் மற்றும் ஆராய்ச்சி நடுவம் கௌரவ செயலாளர் ஆ. சங்கர் மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நெடுஞ்சாலையில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும். தூத்துக்குடி விமான நிலையம் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை தெரு விளக்குகள் அமைக்க வேண்டும்.
கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் அந்தோணியார்புரத்தில் நான்கு வழிச் சாலையின் குறுக்கே அமைக்கப்பட்ட பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் இந்தப் பகுதியில் தற்காலிக சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 7 மாதங்கள் கடந்த நிலையில் இன்னும் பாலத்தை சீரமைக்கும் பணி தொடங்கப்படாதது மிகவும் வேதனையாக உள்ளது. ஆகவே தூத்துக்குடி - நெல்லையை இணைக்கக் கூடிய இந்த முக்கியமான சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள இரண்டு சுங்க சாவடிகளிலும் ஆம்புலன்ஸ் செல்வதற்கென தனியாக ஒரு சாலை வசதி ஏற்படுத்தி தர உத்திரவிட வேண்டும். தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி சாலையில் தற்பொழுது புதிய மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் தூசி மற்றும் புழுதி பறந்து காற்றில் கலப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. ஆகவே இதனை தடுக்க அப்பகுதியில் தண்ணீர் தெளிப்பதோடு விஞ்ஞான முறையில் உரிய மேல் நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
அது என்ன செய்தி ?Jul 31, 2024 - 09:58:25 PM | Posted IP 162.1*****
ஹமாஸ் தலைவரா? ஹமாஸ் ஒரு தீவிரவாதி இயக்கம் தானே, "ஹமாஸ் தீவிரவாதி தலைவன் பலி" அப்படி தலைப்பு செய்தி போடுங்க.
மேலும் தொடரும் செய்திகள்

அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது குழந்தை இறப்பு: விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு
புதன் 21, மே 2025 11:32:05 AM (IST)

இளம்பெண்ணை வன்கொடுமை செய்த நடிகர் கைது
புதன் 21, மே 2025 10:38:52 AM (IST)

பெண் வருவாய் ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை
புதன் 21, மே 2025 10:36:30 AM (IST)

சூரிய ஒளி மின்சார திட்டம் அமைக்க மத்திய அரசு மானியம் : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
செவ்வாய் 20, மே 2025 5:46:45 PM (IST)

மதுரை - புனலூர் ரயிலை திருநள்ளாறு வரை நீட்டித்து நவகிரக எக்ஸ்பிரஸ் இயக்க கோரிக்கை!
செவ்வாய் 20, மே 2025 11:53:12 AM (IST)

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி: அரசு தொழில்நுட்ப கல்லூரியில் புதிய பாடத்திட்டம் தொடக்கம்!
செவ்வாய் 20, மே 2025 10:12:53 AM (IST)

Thoothukudi kaaranJul 31, 2024 - 11:51:54 PM | Posted IP 162.1*****