» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ஆட்டோவில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : டிரைவர் கைது!
திங்கள் 29, ஜூலை 2024 12:42:47 PM (IST)
கருங்கல் அருகே ஆட்டோவில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
குமரி மாவட்டம், கருங்கல் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த தம்பதிக்கு 11 வயதில் மகள் உள்ளார். இந்த சிறுமி 7-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று மாணவியின் தாய்-தந்தைக்கு திருமண நாள் ஆகும். எனவே, திருமண நாளை கொண்டாடுவதற்காக மாணவியின் பாட்டி வீட்டுக்கு செல்ல திட்டமிட்டனர்.
இதற்காக மாணவி உள்பட 3 பேரும் முள்ளங்கினாவிளை புளிச்சான்விளையை சேர்ந்தவர் ரசல் ராஜின் (54) ஆட்டோவில் மேல்மிடாலம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர். தெருவுக்கடை பகுதிக்கு சென்றபோது ஆட்டோவை நிறுத்துமாறு தம்பதி கூறினர். இதையடுத்து மாணவியின் தந்தை சவரம் செய்வதற்காக சலூன் கடைக்கு சென்றார். அதேபோல் தாயாரும் அருகில் உள்ள ஒரு பேக்கரியில் கேக் வாங்குவதற்காக சென்றுவிட்டார்.
அப்போது மாணவி மட்டும் ஆட்டோவில் இருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட ரசல்ராஜ் திடீரென மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி கதறி அழுதார். சிறிது நேரத்துக்கு பிறகு வந்த தாயாரிடம் நடந்தவற்றை மாணவி கூறி அழுதுள்ளார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த தாயார், ஆட்டாே டிரைவரிடம் இதுபற்றி தட்டிக்கேட்டு கண்டித்து எச்சரித்தார்.
பின்னர், இதுகுறித்து மாணவியின் தாயார் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில் ரசல்ராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் ஆட்டோவுக்குள் வைத்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசிப் பெருந்திருவிழா நாளை கொடியேற்றம்!
புதன் 20, மே 2026 3:27:05 PM (IST)

மகளிர் ஐடிஐ-யில் மாணவியர் சேர்க்கை தொடக்கம்: ஆண்லைனில் விண்ணப்பிக்கலாம்!
புதன் 20, மே 2026 10:14:49 AM (IST)

கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட 2 குழந்தைகள்: உயிர்காத்த தீயணைப்பு வீரருக்கு பாராட்டு மழை!
புதன் 20, மே 2026 8:37:00 AM (IST)

சொட்டு நீர் பாசனத்திற்கு 100 சதவீதம் மானியம் : விவசாயிகள் பயன்பெற ஆட்சியர் அழைப்பு!
செவ்வாய் 19, மே 2026 3:53:35 PM (IST)

நாகர்கோவிலில் மே 22ல் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: இளைஞர்களுக்கு அழைப்பு !
செவ்வாய் 19, மே 2026 3:41:34 PM (IST)

குருவாயூர் எக்ஸ்பிரஸில் நகை வியாபாரியிடம் 1½ கிலோ தங்க நகைகள் கொள்ளை!
ஞாயிறு 17, மே 2026 11:33:58 AM (IST)


