» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மூக்குப்பீறி கிராமப்புறத் தமிழ் மன்றத்தின் இலக்கிய மன்ற கூட்டம்
செவ்வாய் 9, ஜூலை 2024 3:11:29 PM (IST)
மூக்குப்பீறி கிராமப்புறத் தமிழ் மன்றத்தின் இலக்கிய மன்ற கூட்டம் இலக்கிய மன்றத் தலவர் கவிஞர் தேவதாசன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் தூத்துக்குடி கவிஞர் எழுத்தாளர் நெல்லை தேவனின் ஷோக்காக சிரிங்க என்ற நூல் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது. தலைவர் தேவதாசன் ஆரம்ப உரையாற்றினார். பின்னர் ஒய்வுபெற்ற வட்டாட்சியர் சி. அய்யாக்குட்டி நூலை ஆய்வு செய்து உரையாற்றினர். அவருக்கு இலக்கிய மன்றத்தின் சார்பில் திறனாய்வு வித்தகர் என்ற விருது வழங்கி கௌரவிக்கப்ப்பட்டார்.
பிண்ணா ஆய்விற்குப் பதிலளித்து. நூலாசிரியர் நெல்லை தேவன் பேசினர், அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.கூட்டத்தில் ஒய்வு பெற்ற பேராசிரியா காசிராஜன், எழுத்தாளர் கண்ணன்குமார விஸ்வரூபன் என்ற ஆறுமுகப் பெருமாள், கவிஞர் சிவசுப்பிரமணியன், ஒய்வுயெற்ற தமையாசிரியர் அருள்ராஜ், மற்றும் பலர் கலந்து கொண்டனர். இருதியல் மன்ற செயலாளர் விவின் ஜெயக்குமார் நன்றி கூறினார். படம் உண்டு.