» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி பக்கிள் ஓடையில் அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு
வெள்ளி 17, மே 2024 9:59:52 AM (IST)

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து தூத்துக்குடி பக்கிள் ஓடையில் அடைப்புகளை சரிசெய்யும் பணிகளை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டார்.
தூத்துக்குடி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கையாக ஆரஞ்ச் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தூத்துக்குடி மாநகர பகுதிகளில் மழைநீரை வெளியேற்றும் வடிகால்களை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக மழைநீரை வெளியேற்றும் பிரதான கால்வாயாக உள்ள பக்கிள் ஓடையில் உள்ள அடைப்புகளை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இதனை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினார். இதேபோன்று கரிக்களம் பகுதியில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணியையும் அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டார். அப்போது மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், கவுன்சிலர் எடின்டா, திரேஸ்புரம் பகுதி இளைஞரணி ராஜா மற்றும் மணி, அல்பர்ட் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் போக்குவரத்து விதிமீறல்: 156 வாகனங்கள் பறிமுதல்!
வெள்ளி 26, டிசம்பர் 2025 4:28:21 PM (IST)

மணக்குடி கிராமத்தில் சுனாமி நினைவு தினம்: கல்லறை தோட்டத்தில் மீனவர்கள் அஞ்சலி!
வெள்ளி 26, டிசம்பர் 2025 12:14:46 PM (IST)

நாகர்கோவில் புதிய போக்குவரத்து ஆய்வாளர் பேச்சிமுத்து பொறுப்பேற்பு
வியாழன் 25, டிசம்பர் 2025 10:31:06 AM (IST)

கலைப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: ஆட்சியர் வழங்கினார்
புதன் 24, டிசம்பர் 2025 12:16:42 PM (IST)

கிறிஸ்துமஸ் விழா: விஜய் வசந்த் எம்பி வாழ்த்து!
புதன் 24, டிசம்பர் 2025 11:49:03 AM (IST)

ஒரே மேடையில் த.வெ.க., காங்கிரஸ் நிர்வாகிகள்: குமரி அரசியலில் பரபரப்பு
புதன் 24, டிசம்பர் 2025 10:47:29 AM (IST)


.gif)
கந்தசாமிமே 18, 2024 - 05:27:21 AM | Posted IP 162.1*****