» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி பக்கிள் ஓடையில் அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு
வெள்ளி 17, மே 2024 9:59:52 AM (IST)

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து தூத்துக்குடி பக்கிள் ஓடையில் அடைப்புகளை சரிசெய்யும் பணிகளை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டார்.
தூத்துக்குடி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கையாக ஆரஞ்ச் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தூத்துக்குடி மாநகர பகுதிகளில் மழைநீரை வெளியேற்றும் வடிகால்களை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக மழைநீரை வெளியேற்றும் பிரதான கால்வாயாக உள்ள பக்கிள் ஓடையில் உள்ள அடைப்புகளை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இதனை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினார். இதேபோன்று கரிக்களம் பகுதியில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணியையும் அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டார். அப்போது மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், கவுன்சிலர் எடின்டா, திரேஸ்புரம் பகுதி இளைஞரணி ராஜா மற்றும் மணி, அல்பர்ட் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரசவித்த பின் குழந்தைகளின் செவித்திறன்களை நன்கு ஆராய வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள்
சனி 5, ஜூலை 2025 12:41:12 PM (IST)

திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் மர்ம மரணம் : தாய் புகார் - போலீஸ் விசாரணை!!
சனி 5, ஜூலை 2025 10:48:06 AM (IST)

இரணியல் அரண்மனை பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது : ஆட்சியர் அழகுமீனா தகவல்
வெள்ளி 4, ஜூலை 2025 5:36:19 PM (IST)

கிஷ் தீவில் சிக்கி தவிக்கும் குமரி மீனவர்களை மீட்க வேண்டும்: விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
வெள்ளி 4, ஜூலை 2025 10:40:08 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 3, ஜூலை 2025 10:16:50 AM (IST)

கால்நடைகளுக்கு கால்நோய், வாய்நோய் தடுப்பூசி பணி : ஆட்சியர் துவக்கி வைத்தார்!
புதன் 2, ஜூலை 2025 3:41:45 PM (IST)

கந்தசாமிமே 18, 2024 - 05:27:21 AM | Posted IP 162.1*****