» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

டாஸ்மாக் கடை அருகே மது விற்றவர் கைது : 88 மதுபாட்டில்கள் பறிமுதல்

வெள்ளி 19, ஏப்ரல் 2024 8:29:03 PM (IST)

கோவில்பட்டியில் டாஸ்மாக் கடை அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 88 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலையில் தேர்தல் பறக்கும்படை அலுவலரும், துணை வேளாண்மை அலுவலருமான நாகராஜன் தலைமையிலான அதிகாரிகள் கயத்தாறு-கடம்பூர் சாலையில் உள்ள அரசு டாஸ்மாக் கடை அருகே ஒருவர் சந்தேகத்துக்குரிய இடத்தில் நின்று கொண்டிருந்தார்.

அவரை பறக்கும்படையினர் பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர் கயத்தாறு காந்தாரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பெருமாள் மகன் குருநாதன் என்பதும், அனுமதி இன்றி டாஸ்மாக் கடை அருகிலே மதுவிற்று வந்ததும் தெரிய வந்தது. அவர் அப்பகுதியில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 88 மதுபாட்டில்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் குருநாதனையும், மதுபாட்டில்களையும் பறக்கும் படையினர் கோவில்பட்டி மதுவிலக்கு பிரிவு போலீசார் ஒப்படைத்தனர். இதுகுறித்து அந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து குருநாதனை கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory