» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தந்தையை கொன்ற வாலிபருக்கு 7 ஆண்டு சிறை: நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பு

சனி 13, ஏப்ரல் 2024 10:30:48 AM (IST)

தந்தையை கொன்ற வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் நீதிமன்றம்  தீர்ப்பளித்தது.

ராஜாக்கமங்கலம் அருகே உள்ள வெள்ளமோடி வடக்கு தெருவை சேர்ந்தவர் லிங்கதுரை (50), கொத்தனார். இவருடைய மனைவி கோமதி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சூரியா (24). இவர் பாலிடெக்னிக் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். மது குடிக்கும் பழக்கம் உடைய சூரியா அடிக்கடி வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.

இதனை அவரது தந்தை லிங்கதுரை கண்டித்து வந்தார். மேலும் செலவுக்கும் லிங்கதுரையிடம் பணம் கேட்டு அவர் தகராறு செய்து வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 22-7-2020 அன்று இரவு லிங்கதுரை, கோமதி, சூரியா ஆகியோர் வீட்டில் இருந்தனர். அப்போது தந்தை-மகன் இடையே திடீரென தகராறு ஏற்பட்டு கடும் வாக்குவாதம் நிலவியது. இதில் ஆத்திரமடைந்த சூரியா வீட்டில் இருந்த கட்டையை எடுத்து தந்தை என்றும் பாராமல் லிங்கதுரையை தாக்கினார். 

இந்த தாக்குதலில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சூரியாவை கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு விசாரணை நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கூடுதல் அமர்வு விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜோசப் ஜாய் நேற்று தீர்ப்பு கூறினார். தீர்ப்பில், சூரியாவை குற்றவாளி என அறிவித்து அவருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மதியழகன் ஆஜரானார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory