» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பிரதமர் வருகையை ஒட்டி போக்குவரத்து மாற்றங்கள் : காவல்துறை அறிவிப்பு!

வியாழன் 14, மார்ச் 2024 5:08:02 PM (IST)

பிரதமர் வருகையை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுவதாக காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை வெளியிட்ட அறிக்கை: கன்னியாகுமரிக்கு பிரதமர் நரேந்திரமோடி 15.03.2024 அன்று பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வருகைதர இருக்கிறார்கள். எனவே பாதுகாப்பு காரணங்களுக்காக மாவட்ட காவல்துறை சார்பாக சில போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

15.03.2024 காலை 06.00 மணி முதல் மதியம் பொதுக்கூட்டம் முடியும் வரை கன்னியாகுமரி ரவுண்டானாவில் இருந்து மகாதானபுரம் ரவுண்டானா வரை எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படாது. பொதுக்கூட்டத்திற்கு வருகை தரும் வாகனங்கள் சரவணந்தேரி வரை அனுமதிக்கப்படுவார்கள். மேலும் கன்னியாகுமரி ரவுண்டானாவில் இருந்து புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி வரை எந்த வாகனமோ பாதசாரிகளோ அனுமதிக்கப்பட மாட்டார்கள். கன்னியாகுமரிக்கு வரும் அரசு பேருந்துகள் அனைத்தும் கன்னியாகுமரி ரயில் நிலையத்திற்கு முன்பாகவே நிறுத்தி இயக்கப்படும் என்பதை பொதுமக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

மாண்புமிகு பிரதமர் அவர்களின் வருகையின் பாதுகாப்பு காரணங்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் மேற்குறிப்பிட்ட போக்குவரத்து மாற்றங்களுக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தர மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory