» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு: காவல் துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்!!

புதன் 13, மார்ச் 2024 3:29:07 PM (IST)



குமரி மாவட்ட காவல்துறை அதிகாரிகளை கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் காவல் ஆய்வாளர் சீதாலெட்சுமியிடம் புகார் அளிக்க சென்ற புகார்தாரரை பல மணி நேரம் காக்க வைத்தும் புகார் அளிக்க சென்றவர் மீது பொய் வழக்கு பதிவு செய்தும் அவருக்கு ஆதரவாக சென்ற வழக்கறிஞர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளதை கண்டித்தும் அதற்கு துணைபோகும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை கண்டித்தும் கன்னியாகுமரி மாவட்ட வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்றத்தை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திரளானோர் கலந்து காெண்டு காவல்துறை அதிகாரியை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory