» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

திருவிழா மின் அலங்கார வளைவிலிருந்து தவறி விழுந்து இளைஞா் பலி!

வெள்ளி 12, ஜனவரி 2024 10:26:01 AM (IST)

சாமிதோப்பு அருகே, திருவிழாவுக்காக அமைக்கப்பட்ட மின் அலங்கார வளைவிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த இளைஞா் பரிதாபமாக உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அருகே சாஸ்தான் கோவில்விளையைச் சோ்ந்த ராஜமணி மகன் நாகராஜன் (27). எலக்ட்ரிக்கல் வேலை பாா்த்து வந்தாா். அவா் நேற்று சாமிதோப்பு அருகே கோயில் திருவிழாவுக்காக அமைக்கப்பட்ட மின் அலங்கார வளைவு மீது ஏறி, விளக்கைப் பழுதுநீக்கும் பணியில் ஈடுபட்டாராம். 

அப்போது, அவா் நிலைதடுமாறி கீழே விழுந்தாராம். இதில், காயமடைந்த அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து ராஜமணி அளித்த புகாரின்பேரில் தென்தாமரைக்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory