» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சாலையில் பள்ளத்தை சீரமைத்த போக்குவரத்து போலீசார் - பொதுமக்கள் பாராட்டு!

சனி 6, ஜனவரி 2024 3:24:35 PM (IST)



நாகர்கோவில் சாலையில் இருந்த பள்ளத்தை சீரமைத்த போக்குவரத்து போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். 

நாகர்கோவில் பார்வதிபுரத்தில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் தொடங்கும் பகுதி யில் சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டு இருந்தது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்து நடந்து வந்தது. நேற்று காலையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் பள்ளத்தில் விழுந்து காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

இதையடுத்து போக்குவரத்து போலீசார் வில்லியம் பெஞ்ச மின், சுரேஷ்குமார், முருகன் ஆகியோர் சாலையில் உள்ள பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்காக அவர்கள் கற்கள் மற்றும் பாறை பொடி போன்றவற்றை லோடு ஆட்டோவில் கொண்டு வந்து பள்ளத்தை நிரப்பினர். மேலும் அந்த பகுதியில் சாலையில் உள்ள பள்ளங்களையும் சீரமைத்தனர். போக்குவரத்து போலீசாரின் இப்பணியை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டினர்


மக்கள் கருத்து

ஓட்டு போட்ட முட்டாள்Jan 7, 2024 - 02:22:51 PM | Posted IP 172.7*****

போக்குவரத்து போலீசாருக்கு பாராட்டுகள். தமிழ்நாட்டுல அரசியல்வாதிகள் எல்லாம் சொகுசு கார்ல் வேடிக்கை மட்டும் பார்த்துட்டு போய்விடும்.

செம்மJan 6, 2024 - 09:37:27 PM | Posted IP 162.1*****

சார். அருமை. 🤗🤗

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory