» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
சாலையில் பள்ளத்தை சீரமைத்த போக்குவரத்து போலீசார் - பொதுமக்கள் பாராட்டு!
சனி 6, ஜனவரி 2024 3:24:35 PM (IST)
நாகர்கோவில் சாலையில் இருந்த பள்ளத்தை சீரமைத்த போக்குவரத்து போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
நாகர்கோவில் பார்வதிபுரத்தில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் தொடங்கும் பகுதி யில் சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டு இருந்தது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்து நடந்து வந்தது. நேற்று காலையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் பள்ளத்தில் விழுந்து காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து போக்குவரத்து போலீசார் வில்லியம் பெஞ்ச மின், சுரேஷ்குமார், முருகன் ஆகியோர் சாலையில் உள்ள பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்காக அவர்கள் கற்கள் மற்றும் பாறை பொடி போன்றவற்றை லோடு ஆட்டோவில் கொண்டு வந்து பள்ளத்தை நிரப்பினர். மேலும் அந்த பகுதியில் சாலையில் உள்ள பள்ளங்களையும் சீரமைத்தனர். போக்குவரத்து போலீசாரின் இப்பணியை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டினர்
ஓட்டு போட்ட முட்டாள்Jan 7, 2024 - 02:22:51 PM | Posted IP 172.7*****