» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருது : விண்ணப்பங்கள் வரவேற்பு

வியாழன் 4, ஜனவரி 2024 11:44:51 AM (IST)

திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருது பெற தகுதியுடையவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

தமிழக அரசால் சமூக எதிர்ப்புகனை மீறி தன்னுடைய சொந்த முயற்சியினால் சிறப்பாக முன்னேறிய திருநங்கையர் ஒருவருக்கு முன்மாதிரி விருது வழங்கப்பட உள்ளதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் வசிக்கும் திருநங்கைகளில் கீழ்கண்ட தகுதியுடையவர்கள் 31.01.2024 - க்குள் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (award.tn.gov.in) பதிவு செய்யுமாறு  கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர்  தெரிவித்துள்ளார்.

திருநங்கையர் தின விருது வழங்கும் பொருட்டு கருத்துருக்களை அனுப்புவதற்கான  விதிமுறைகள்

1. திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் தானாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும்.

2. குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும்.

3. திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது.

4. விண்ணப்பங்களை  award.tn.gov.in  பதிவு செய்த பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலக இணைப்பு கட்டடிடத்தில் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் 2  Set Boollet  சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory