» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வீடுபுகுந்து பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்: அண்ணன், தம்பி கைது

சனி 30, டிசம்பர் 2023 10:41:56 AM (IST)

வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனா்.

குமரி மாவட்டம்,களியக்காவிளை அருகேயுள்ள களியக்கல் தாழே புத்தன்வீடு பகுதியைச் சோ்ந்தவா் பென்னட் மனைவி லைலா (50). முந்திரி தொழிற்சாலையில் வேலை பாா்த்து வருகிறாா். இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த சத்தியராஜ் மகன்கள் சஜி (31), சஜூ (29) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில் இரு நாள்களுக்கு முன் அண்ணன், தம்பி இருவரும் லைலாவின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவரை தகாத வாா்த்தைகள் பேசி தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த லைலா, குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இது குறித்து லைலா அளித்த புகாரின் பேரில் களியக்காவிளை போலீசார் வழக்குப் பதிந்து சஜி, சஜூ ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory