» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரியில் சூறைக்காற்று: விவேகானந்தர் பாறைக்கு படகு சேவை ரத்து; பயணிகள் ஏமாற்றம்

வெள்ளி 29, டிசம்பர் 2023 4:46:46 PM (IST)

குமரியில் சூறைக்காற்று காரணமாக விவேகானந்தர் பாறைக்கு படகு சேவை ரத்து செய்யப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

வழக்கத்தைவிட குறைவான அளவு மீனவர்களே பைபர் படகு மற்றும் நாட்டுப் படகுகளில் மீன் பிடிக்கச் சென்றனர். அதே நேரம் விசைப் படகுகளும் குறைந்த அளவில் கடலுக்கு சென்று மீன் பிடித்தன. கடந்த 3 தினங்களாக காற்றால் கடல் சீற்றம் ஏற்பட்டு வருவதால் மீன்கள் வரத்து குறைந்து குமரி மாவட்டத்தில் மீன்கள் விலை உயர்ந்துள்ளது.

தற்போது பண்டிகை சீஸன் மற்றும் பள்ளிகள் அரையாண்டு விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது. நேற்று காலையில் இருந்து சூறைக்காற்றால் கடல் நீர்மட்டமும் தாழ்வாக காணப்பட்டது. இதனால் விவேகானந்தர் பாறைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு நுழைவு வாயில் மூடப்பட்டது.

படகு பயணம் செய்வதற்காக அதிகாலை முதல் வரிசையில் நின்ற சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மதியம் 2 மணியளவில் கடல் நீர்மட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங் கியது. 6 மணி நேரம் படகு சேவை ரத்தானதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory