» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சென்னை-நெல்லை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை: நாகர்கோவில் வரை நீட்டிப்பு

செவ்வாய் 26, டிசம்பர் 2023 11:42:18 AM (IST)

சென்னை எழும்பூர்- நெல்லை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை நாகர்கோவில் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

சென்னை எழும்பூர்- நெல்லை இடையே வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது இந்த ரயில் சேவையானது நாகர்கோவில் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, அடுத்த மாதம் 4-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை வியாழக்கிழமை தோறும், சென்னை எழும்பூரில் இருந்து காலை 5.15 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில், மதியம் 2.10 மணிக்கு நாகர்கோவிலை வந்தடையும். அதேபோல, நாகர்கோவிலில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில், இரவு 11.45 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory