» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மழை வெள்ளத்தில் ஒரே குடும்பத்தில் 4பேர் பலி
வெள்ளி 22, டிசம்பர் 2023 1:01:02 PM (IST)
தூத்துக்குடியில் மழை வெள்ளத்தில் சிக்கி ஒரே குடும்பத்தில் 4பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி முத்தையாபுரத்தில் ஞானமுத்து என்ற இளைஞர், அவரது தாயார், 5 வயது குழந்தை உள்ளிட்ட 4 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இறந்தனர். மேலும், வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 2 பேர் இறந்துள்ளனர். அவர்களின் உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. மழை வெள்ளத்தால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.