» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கடலில் மீன்பிடித்தபோது மின்னல் தாக்கி மீனவர் பலி : தூத்துக்குடியில் சோகம்!
வெள்ளி 22, அக்டோபர் 2021 3:39:31 PM (IST)
தூத்துக்குடியில் கடலில் மீன்பிடித்தபோது மின்னல் தாக்கியதில் மீனவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி வெள்ளப்பட்டி 50 வீடு காலனியை சேர்ந்தவர் அந்தோணி பாஸ்கர். இவரது மகன்கள் சதீஷ் மற்றும் அந்தோணி செசிலர். (28), மீனவர்களான இவர்கள் இருவரும் இன்று காலை பைபர் படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது திடீரென்று மின்னல் தாக்கியதில் அந்தோணி செசிலர் பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொன்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் 3 அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து : தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
செவ்வாய் 1, ஜூலை 2025 10:49:52 AM (IST)

இஸ்ரோ இன்ஜினியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை: குடும்ப பிரச்சினையால் விபரீத முடிவு!
செவ்வாய் 1, ஜூலை 2025 8:34:20 AM (IST)

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை கால நீடிப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 5:48:59 PM (IST)

தனியார் மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு!
திங்கள் 30, ஜூன் 2025 4:04:27 PM (IST)

இணையதளம் மூலமாக மட்டுமே சுகாதார சான்றிதழ் வழங்கப்படும் : ஆட்சியர் தகவல்
திங்கள் 30, ஜூன் 2025 12:19:27 PM (IST)

மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர்
ஞாயிறு 29, ஜூன் 2025 11:28:11 AM (IST)

RaniOct 22, 2021 - 04:11:39 PM | Posted IP 108.1*****