» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இந்திய வங்கிக்கு வட்டியுடன் ரூ.100 கோடி செலுத்த நீரவ் மோடிக்கு லண்டன் நீதிமன்றம் உத்தரவு!
புதன் 24, ஜூன் 2026 11:57:40 AM (IST)
இந்திய வங்கியிடம் வாங்கிய கடனை, அதற்கான வட்டியுடன் சேர்த்து சுமார் ரூ. 100 கோடியாகத் திருப்பிச் செலுத்த வேண்டும் என பிரிட்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நகை வியாபாரி நீரவ் மோடிக்கு லண்டன் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
வைர நகை வியாபாரி நீரவ் மோடி, கடந்த 2012-ஆம் ஆண்டில் துபாயில் உள்ள தனது 'ஃபயர்ஸ்டார் டைமண்ட் எப்இசட்இ' என்ற நிறுவனத்திற்காக இந்திய வங்கியிடம் (Indian Bank) சுமார் ரூ.38.9 கோடி கடன் பெற்றிருந்தார். இந்த நிறுவனம் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறினால், அதைத் தனிப்பட்ட முறையில் தானே செலுத்துவதாக நீரவ் மோடி உத்தரவாதப் பத்திரத்தில் கையெழுத்திட்டிருந்தார்.
கடந்த 2018-இல் பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) மோசடிப் புகார் வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, இந்திய வங்கி தனது கடனைத் திரும்பக் கோரியது. ஆனால், நீரவ் மோடியோ அல்லது அவரது நிறுவனமோ பணத்தைச் செலுத்தாததால், லண்டன் நீதிமன்றத்தில் இந்திய வங்கி சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கின் விசாரணையின் போது, தான் இந்தியாவில் இல்லாததால் வங்கி அனுப்பிய கடன் மறுசீரமைப்பு அறிவிப்புகள் தனக்குக் கிடைக்கவில்லை என நீரவ் மோடி வாதிட்டார். ஆனால், அவர் அடைக்கப்பட்டுள்ள லண்டன் சிறைக்கும் அவரது வழக்கறிஞர்களுக்கும் முறையாக நோட்டீஸ் அனுப்பப்பட்டதைச் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், அவரது வாதத்தை முற்றிலும் நிராகரித்தது.
நீரவ் மோடியிடம் முறையான சட்டப்பூர்வ பாதுகாப்பு வாதங்கள் எதுவும் இல்லாததால், அசல் கடன் தொகையான ரூ.38.9 கோடியுடன் வட்டியையும் சேர்த்து மொத்தம் ரூ.100 கோடிக்கும் மேலான தொகையை இந்திய வங்கிக்குச் செலுத்த வேண்டும் என லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மனிதநேயத்துக்கு எதிரான குற்றங்கள்: சிரியா முன்னாள் அதிபருக்கு மரண தண்டனை!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 5:50:59 PM (IST)

அமெரிக்காவுக்கு ஈரான் இழப்பீடு வழங்க வேண்டும்: டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 10:39:39 AM (IST)

சீனா, ஜப்பானை உலுக்கிய 'டால்பின்' சூறாவளி: விமானங்கள் ரத்து: 10 லட்சம் பேர் வெளியேற்றம்!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 5:08:02 PM (IST)

இந்தியப் பொருட்களுக்கு 100 சதவீதம் வரி : அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 9:34:04 AM (IST)

ஸ்பெயினுக்குள் நுழைய முயன்று அகதிகள் கடலில் மூழ்கிய பரிதாபம்: உயிரிழப்பு 100 ஆக உயர்வு!
சனி 8, ஆகஸ்ட் 2026 5:49:35 PM (IST)

இலங்கையில் தொடரும் சிறைக் கலவரங்கள்: கைதிகள் மோதலில் 3 பேர் பலி; 23 பேர் படுகாயம்!
சனி 8, ஆகஸ்ட் 2026 12:18:26 PM (IST)


