» செய்திகள் - விளையாட்டு » உலகம்
லெபனானில் இயேசு சிலையைச் சேதப்படுத்திய இஸ்ரேல் வீரர்: அமைச்சர் கடும் கண்டனம்!
திங்கள் 20, ஏப்ரல் 2026 3:55:13 PM (IST)

தெற்கு லெபனானில் இஸ்ரேல் வீரர் ஒருவர் இயேசுவின் சிலையைச் சேதப்படுத்திய சம்பவத்திற்கு, இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் கிதியோன் சார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
லெபனானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகப் போர் நீடித்து வந்தது. இதன் காரணமாக லெபனானில் பெரும் உயிரிழப்புகளும் சேதங்களும் ஏற்பட்டன. இந்நிலையில், லெபனான் அதிபர் ஜோசப் ஆவன் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பலனாக, இரு நாடுகளுக்கும் இடையே தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. இதனை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். இதன்படி, முதற்கட்டமாக 10 நாட்களுக்குப் போர்நிறுத்தம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், தெற்கு லெபனானில் இஸ்ரேல் பாதுகாப்புப் படையைச் (IDF) சேர்ந்த வீரர் ஒருவர், சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் சிலையைச் சேதப்படுத்தும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
அமைச்சரின் கண்டனம்: இந்தச் செயலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் கிதியோன் சார், "இது இஸ்ரேலின் நற்பண்புகளுக்கு முற்றிலும் முரணான செயல். அனைத்து மதங்களையும், அவற்றின் புனித அடையாளங்களையும் இஸ்ரேல் மதிக்கிறது" என்று தெரிவித்துள்ளார். மேலும், இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் இஸ்ரேல் பாதுகாப்புப் படைக்கும் அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு: பலி 633 ஆக உயர்வு; இந்தியர்கள் உட்பட 3,000 பேர் மாயம்!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:06:57 PM (IST)

நேபாள வெள்ளத்தால் பலியானோரின் எண்ணிக்கை 500 : மீட்புப் பணிகள் தீவிரம்!
வெள்ளி 28, ஆகஸ்ட் 2026 11:23:24 AM (IST)

குழந்தைகளை அடிமையாக்குவதாகக் குற்றச்சாட்டு: 162 கோடி அபராதம் செலுத்த மெட்டா ஒப்புதல்!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 12:01:50 PM (IST)

நேபாள வெள்ளத்திற்கு நிலநடுக்கம் காரணமில்லை : அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் விளக்கம்!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 11:31:18 AM (IST)

நேபாளத்தை உருக்குலைத்த திடீர் வெள்ளப்பெருக்கு: 1,000-க்கும் மேற்பட்டோர் மாயம்!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 11:00:38 AM (IST)

நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: 105 இந்தியர்கள் உட்பட 384 சுற்றுலாப் பயணிகள் மாயம்!
புதன் 26, ஆகஸ்ட் 2026 4:47:40 PM (IST)


