» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி; ஹார்முஸ் ஜலசந்தியை முடக்க டிரம்ப் உத்தரவு!
ஞாயிறு 12, ஏப்ரல் 2026 8:40:07 PM (IST)
ஈரான் அனைத்துக் நாடுகளின் கப்பல்களையும் தடையின்றி அனுமதிக்கும் வரை, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எந்தவொரு கப்பலும் செல்ல அமெரிக்கக் கடற்படை அனுமதிக்காது என அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.
மேற்காசியப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகப் பாகிஸ்தானில் அமெரிக்கத் துணை அதிபருக்கும், ஈரான் அதிகாரிகளுக்கும் இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அணு ஆயுதக் கொள்கை தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படாததே இந்தப் பின்னடைவுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கப்பல்கள் முடக்கம்: உலகின் மிகச்சிறந்த அமெரிக்கக் கடற்படை, ஹார்முஸ் ஜலசந்திக்குள் நுழையும் அல்லது வெளியேறும் அனைத்துக் கப்பல்களையும் தடுக்கும் பணியை உடனடியாகத் தொடங்கும்.
கண்ணிவெடி மிரட்டல்: ஹார்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளதாகக் கூறி ஈரான் உலக நாடுகளை மிரட்டிப் பணம் பறிக்கப் பார்க்கிறது. ஈரானின் இந்தச் செயலுக்கு அமெரிக்கா ஒருபோதும் பயப்படாது.
கப்பம் கட்டினால் நடவடிக்கை: சர்வதேசக் கடல் பரப்பில் ஈரானுக்குக் கப்பம் (பணம்) செலுத்திவிட்டுப் பயணிக்கும் கப்பல்களைக் கண்டறிந்து நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. சட்டவிரோதமாகப் பணம் செலுத்துபவர்களுக்குப் பாதுகாப்பான பயணம் சாத்தியமில்லை.
இராணுவ நடவடிக்கை எச்சரிக்கை:
"ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் வைத்துள்ள கண்ணிவெடிகளை அழிக்கும் பணியைத் தொடங்கியுள்ளோம். அமெரிக்கப் படைகள் மீதோ அல்லது அமைதியான முறையில் பயணிக்கும் கப்பல்கள் மீதோ தாக்குதல் நடத்துவோர் நரகத்திற்கு அனுப்பப்படுவார்கள்" என டிரம்ப் கடுமையாக எச்சரித்துள்ளார்.
மேலும், ஈரானின் கடற்படை மற்றும் விமானப்படை ஏற்கனவே பெரும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளதாகவும், அணு ஆயுதக் கொள்கையால் அந்த நாட்டின் முக்கியத் தலைவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், மிச்சமிருக்கும் இராணுவக் கட்டமைப்பையும் அமெரிக்கா அழித்துவிடும் என்றும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச ஒத்துழைப்பு:
இந்தக் கண்காணிப்பு மற்றும் தடுப்புப் பணியில் மற்ற நாடுகளும் விரைவில் இணைய உள்ளதாகவும், ஈரானின் மிரட்டிப் பணம் பறிக்கும் செயலை அனுமதிக்க முடியாது என்றும் டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரஷிய ஏவுகணைத் தாக்குதலில் 4 இந்தியர்கள் பலி: இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம்
செவ்வாய் 21, ஜூலை 2026 12:42:30 PM (IST)

உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா நள்ளிரவில் ஏவுகணைத் தாக்குதல்: ஒருவர் பலி; 16 பேர் காயம்!
திங்கள் 20, ஜூலை 2026 5:01:30 PM (IST)

துபாய் இந்தியத் துணைத் தூதரகம் தற்காலிகமாக மூடல்: பாஸ்போர்ட், விசா சேவைகள் நிறுத்தம்!
வெள்ளி 17, ஜூலை 2026 12:53:31 PM (IST)

ஈரான் தாக்குதலில் இந்தியர் மரணம் : கப்பல் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு!
வியாழன் 16, ஜூலை 2026 12:37:58 PM (IST)

ஹோர்முஸ் தாக்குதலில் இந்திய மாலுமி பலி: ஈரானுக்கு மத்திய அரசு கண்டனம்!
செவ்வாய் 14, ஜூலை 2026 4:20:43 PM (IST)

ஈரானைக் கற்காலத்திற்குக் கொண்டு வந்துவிட்டோம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிக்கை!
செவ்வாய் 14, ஜூலை 2026 12:11:48 PM (IST)


