» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமெரிக்காவை அதிரவைத்த வடகொரியா: 15,000 கி.மீ தொலைவு பாயும் ஏவுகணை சோதனை வெற்றி!
திங்கள் 30, மார்ச் 2026 9:26:02 AM (IST)

உலக நாடுகளின் எதிர்ப்பையும், பொருளாதாரத் தடைகளையும் மீறி வடகொரியா தனது ராணுவ வலிமையை நிரூபிக்கும் வகையில் அதிநவீன ஏவுகணை என்ஜின் சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
வடகொரியாவிலிருந்து சுமார் 15,000 கி.மீ தொலைவில் உள்ள அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் மற்றும் அதன் ஐரோப்பியக் கூட்டாளி நாடுகளைத் தாக்கும் திறன் கொண்டது. கார்பன் நார் கலவை கொண்டு உருவாக்கப்பட்ட இந்த என்ஜின், திட எரிபொருள் மூலம் இயங்கக்கூடியது. இது திரவ எரிபொருளை விட மிக வேகமாக ஏவப்படக்கூடியது.
கடந்த செப்டம்பரில் 1,970 கிலோ டன்னாக இருந்த உந்துவிசை, தற்போது 2,500 கிலோ டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எதிரிகளின் வான் பாதுகாப்பு ரேடார்களில் சிக்காமல், ஒலியின் வேகத்தில் சென்று தாக்கும் வகையில் இந்த என்ஜின் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் முன்னிலையில் நடைபெற்ற இந்தத் தரைநிலை ஜெட் சோதனை (Ground Jet Test) மிகப்பெரிய வெற்றி என அறிவிக்கப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், வடகொரியாவின் இந்த அதிரடி நடவடிக்கை உலக நாடுகளிடையே பெரும் கிலியை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு: பலி 633 ஆக உயர்வு; இந்தியர்கள் உட்பட 3,000 பேர் மாயம்!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:06:57 PM (IST)

நேபாள வெள்ளத்தால் பலியானோரின் எண்ணிக்கை 500 : மீட்புப் பணிகள் தீவிரம்!
வெள்ளி 28, ஆகஸ்ட் 2026 11:23:24 AM (IST)

குழந்தைகளை அடிமையாக்குவதாகக் குற்றச்சாட்டு: 162 கோடி அபராதம் செலுத்த மெட்டா ஒப்புதல்!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 12:01:50 PM (IST)

நேபாள வெள்ளத்திற்கு நிலநடுக்கம் காரணமில்லை : அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் விளக்கம்!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 11:31:18 AM (IST)

நேபாளத்தை உருக்குலைத்த திடீர் வெள்ளப்பெருக்கு: 1,000-க்கும் மேற்பட்டோர் மாயம்!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 11:00:38 AM (IST)

நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: 105 இந்தியர்கள் உட்பட 384 சுற்றுலாப் பயணிகள் மாயம்!
புதன் 26, ஆகஸ்ட் 2026 4:47:40 PM (IST)


