» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஈரானிய போர்க்கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்: இந்திய துறைமுகம் பயன்படுத்தப்பட்டதா? மத்திய அரசு விளக்கம்!
வியாழன் 5, மார்ச் 2026 11:08:13 AM (IST)

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றத்தின் ஒரு பகுதியாக, ஈரானியக் கடற்படைக் கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதலில் இந்தியத் துறைமுகங்கள் பயன்படுத்தப்பட்டதாக எழுந்த புகார்களை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் கூட்டுத் தாக்குதல்களை நடத்தி வரும் சூழலில், ஈரானின் கடற்படைக் கப்பலான ‘ஐரிஸ் டெனா’ (IRIS Dena) நேற்று அதிகாலை இலங்கைத் தீவின் தெற்குப் பகுதியில் இருந்து 40 நாட்டிக்கல் மைல் தொலைவில் சென்று கொண்டிருந்தது.
அப்போது, அப்பகுதியில் மறைந்திருந்த அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று ஈரானியக் கப்பலை இலக்கு வைத்துத் தாக்கியது. இந்தத் தாக்குதலில் பலத்த சேதமடைந்த அந்தப் போர்க்கப்பல் கடலில் மூழ்கத் தொடங்கியது. கப்பலில் இருந்த 180 பேரில், இதுவரை 87 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதலுக்குள்ளான கப்பலில் இருந்து அவசர கால அழைப்பு விடுக்கப்பட்டதை அடுத்து, இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பல்கள் மற்றும் விமானப்படை விமானங்கள் மூலம் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சர்வதேசக் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த எதிரி நாட்டுப் போர்க்கப்பலைத் தாக்கி மூழ்கடித்ததை அமெரிக்கா உறுதி செய்துள்ளது.
இந்திய அரசு விளக்கம்
சமீபத்தில் இந்தியாவுடன் நடந்த கூட்டு கடற்படைப் பயிற்சியில் பங்கேற்றுவிட்டுத் திரும்பியபோது இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது. இந்தச் சூழலில், ஈரானியக் கப்பலைத் தாக்க இந்தியத் துறைமுகங்களை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் பயன்படுத்தியதாகச் சில தரப்பினர் குற்றம் சாட்டினர்.
இதற்குப் பதிலளித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் மத்திய அரசு: "ஈரானியக் கப்பல் மீதான தாக்குதலுக்கு இந்தியத் துறைமுகங்கள் பயன்படுத்தப்பட்டதாக வெளியாகும் தகவல்கள் முற்றிலும் அடிப்படையற்றவை மற்றும் ஜோடிக்கப்பட்டவை. இத்தகைய தவறான செய்திகளை வன்மையாக மறுக்கிறோம்."
என்று தெரிவித்துள்ளது. சர்வதேச விதிகளின்படி இந்தியா நடுநிலை வகிப்பதையும், இத்தகைய ராணுவத் தாக்குதல்களுக்குத் தனது தளங்களை வழங்கவில்லை என்பதையும் மத்திய அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா நள்ளிரவில் ஏவுகணைத் தாக்குதல்: ஒருவர் பலி; 16 பேர் காயம்!
திங்கள் 20, ஜூலை 2026 5:01:30 PM (IST)

துபாய் இந்தியத் துணைத் தூதரகம் தற்காலிகமாக மூடல்: பாஸ்போர்ட், விசா சேவைகள் நிறுத்தம்!
வெள்ளி 17, ஜூலை 2026 12:53:31 PM (IST)

ஈரான் தாக்குதலில் இந்தியர் மரணம் : கப்பல் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு!
வியாழன் 16, ஜூலை 2026 12:37:58 PM (IST)

ஹோர்முஸ் தாக்குதலில் இந்திய மாலுமி பலி: ஈரானுக்கு மத்திய அரசு கண்டனம்!
செவ்வாய் 14, ஜூலை 2026 4:20:43 PM (IST)

ஈரானைக் கற்காலத்திற்குக் கொண்டு வந்துவிட்டோம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிக்கை!
செவ்வாய் 14, ஜூலை 2026 12:11:48 PM (IST)

ஈரானுக்கு ஆதரவாக களம் இறங்கிய ரஷியா: அதிநவீன உளவு விமானத்தை அனுப்பினார் புதின்!
செவ்வாய் 14, ஜூலை 2026 8:33:19 AM (IST)


