» செய்திகள் - விளையாட்டு » உலகம்
உக்ரைன் - ரஷியா போர்நிறுத்தம் தீர்மானம்: ஐ.நா. வாக்கெடுப்பைப் புறக்கணித்தது இந்தியா!
புதன் 25, பிப்ரவரி 2026 5:13:51 PM (IST)
உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் ஐந்தாவது ஆண்டாகத் தொடர்ந்து வரும் நிலையில், ஐ.நா. பொதுச் சபையில் கொண்டு வரப்பட்ட போர்நிறுத்தத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா நடுநிலை வகித்துள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கிய உக்ரைன் - ரஷியா போர், நேற்றுடன் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்து, இன்று ஐந்தாவது ஆண்டில் (5-ம் ஆண்டு) அடி எடுத்து வைத்துள்ளது. இன்னும் தீர்வு காணப்படாத இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர, 193 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையில் உக்ரைன் சார்பில் வரைவு தீர்மானம் ஒன்று நேற்று கொண்டு வரப்பட்டது.
'உக்ரைனில் நீண்டகால அமைதிக்கு ஆதரவு' என்ற தலைப்பிலான அந்தத் தீர்மானத்தில், இரு நாடுகளுக்கும் இடையே உடனடி, முழு அளவிலான மற்றும் நிபந்தனையற்ற போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.
வாக்கெடுப்பு விவரம்: இந்தத் தீர்மானத்தின் மீது நடைபெற்ற வாக்கெடுப்பில் உலக நாடுகள் பல்வேறு நிலப்பாடுகளை எடுத்தன ஆதரவாக: 107 நாடுகள் வாக்களித்தன. எதிராக 12 நாடுகள் வாக்களித்தன. இந்தியா உள்ளிட்ட 51 நாடுகள் வாக்களிக்காமல் நடுநிலை வகித்தன.
இந்தியாவுடன் சேர்த்து இலங்கை, வங்காளதேசம் உள்ளிட்ட ஆசிய நாடுகளும், அமெரிக்கா, சீனா, தென் ஆப்பிரிக்கா, பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளும் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் விலகி இருக்க முடிவு செய்தன.
தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். போர் தொடங்கி நான்கு ஆண்டுகள் கடந்தும் அமைதிக்கான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாதது சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கிய உக்ரைன் - ரஷியா போர், நேற்றுடன் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்து, இன்று ஐந்தாவது ஆண்டில் (5-ம் ஆண்டு) அடி எடுத்து வைத்துள்ளது. இன்னும் தீர்வு காணப்படாத இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர, 193 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையில் உக்ரைன் சார்பில் வரைவு தீர்மானம் ஒன்று நேற்று கொண்டு வரப்பட்டது.
'உக்ரைனில் நீண்டகால அமைதிக்கு ஆதரவு' என்ற தலைப்பிலான அந்தத் தீர்மானத்தில், இரு நாடுகளுக்கும் இடையே உடனடி, முழு அளவிலான மற்றும் நிபந்தனையற்ற போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.
வாக்கெடுப்பு விவரம்: இந்தத் தீர்மானத்தின் மீது நடைபெற்ற வாக்கெடுப்பில் உலக நாடுகள் பல்வேறு நிலப்பாடுகளை எடுத்தன ஆதரவாக: 107 நாடுகள் வாக்களித்தன. எதிராக 12 நாடுகள் வாக்களித்தன. இந்தியா உள்ளிட்ட 51 நாடுகள் வாக்களிக்காமல் நடுநிலை வகித்தன.
இந்தியாவுடன் சேர்த்து இலங்கை, வங்காளதேசம் உள்ளிட்ட ஆசிய நாடுகளும், அமெரிக்கா, சீனா, தென் ஆப்பிரிக்கா, பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளும் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் விலகி இருக்க முடிவு செய்தன.
தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். போர் தொடங்கி நான்கு ஆண்டுகள் கடந்தும் அமைதிக்கான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாதது சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா நள்ளிரவில் ஏவுகணைத் தாக்குதல்: ஒருவர் பலி; 16 பேர் காயம்!
திங்கள் 20, ஜூலை 2026 5:01:30 PM (IST)

துபாய் இந்தியத் துணைத் தூதரகம் தற்காலிகமாக மூடல்: பாஸ்போர்ட், விசா சேவைகள் நிறுத்தம்!
வெள்ளி 17, ஜூலை 2026 12:53:31 PM (IST)

ஈரான் தாக்குதலில் இந்தியர் மரணம் : கப்பல் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு!
வியாழன் 16, ஜூலை 2026 12:37:58 PM (IST)

ஹோர்முஸ் தாக்குதலில் இந்திய மாலுமி பலி: ஈரானுக்கு மத்திய அரசு கண்டனம்!
செவ்வாய் 14, ஜூலை 2026 4:20:43 PM (IST)

ஈரானைக் கற்காலத்திற்குக் கொண்டு வந்துவிட்டோம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிக்கை!
செவ்வாய் 14, ஜூலை 2026 12:11:48 PM (IST)

ஈரானுக்கு ஆதரவாக களம் இறங்கிய ரஷியா: அதிநவீன உளவு விமானத்தை அனுப்பினார் புதின்!
செவ்வாய் 14, ஜூலை 2026 8:33:19 AM (IST)


