» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஷேக் ஹசீனா வெளியேற்றத்திற்குப் பிறகு 18 மாதங்கள் கழித்து வங்க தேசத்தில் தேர்தல்!
வியாழன் 12, பிப்ரவரி 2026 11:55:49 AM (IST)

வங்காளதேசத்தில் முன்னெப்போதும் இல்லாத பாதுகாப்பு மற்றும் புதிய தேர்தல் தொழில்நுட்பங்களுடன் பொதுத்தேர்தல் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
2024 ஆகஸ்ட் மாதம் நடந்த நாடு தழுவிய போராட்டங்களைத் தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனா பதவியில் இருந்து விலகி நாட்டை விட்டு வெளியேறிய பிறகு நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும்.
நாடு முழுவதும் உள்ள 300 தொகுதிகளில் 299 தொகுதிகளுக்கு இன்று காலை 7:30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 4:30 மணி வரை இது தொடரும். ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணமடைந்ததால் அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் வரலாற்றிலேயே இல்லாத வகையில் சுமார் 10 லட்சம் பாதுகாப்புப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு, அங்கு கவச வாகனங்கள் (APCs) மற்றும் விரைவு அதிரடிப் படைகள் (RATs) குவிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு கண்காணிப்பிற்காக முதன்முறையாக ட்ரோன்களும் பயன்படுத்தப்படுகின்றன.
ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போதைய களத்தில் வங்காளதேச தேசிய கட்சி (BNP) மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி ஆகிய கட்சிகளுக்கு இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.
முதன்முறையாக வெளிநாடுகளில் வாழும் வங்காளதேச மக்கள் தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான அஞ்சல் வாக்கு (IT-based postal ballot) முறையில் வாக்களிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் உடனடியாக எண்ணிக்கை தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசின் 18 மாத ஆட்சிக்குப் பிறகு நடைபெறும் இந்தத் தேர்தல், வங்காளதேசத்தின் ஜனநாயகப் பாதையில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகின் இளம் பேராசிரியராக 18 வயதில் சாதனை : அமெரிக்க இளைஞருக்கு குவியும் பாராட்டு!
புதன் 5, ஆகஸ்ட் 2026 10:46:30 AM (IST)

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தம்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 10:12:10 AM (IST)

இலங்கை ஈஸ்டர் தினக் குண்டுவெடிப்பு வழக்கு : உயர் அதிகாரிகள் இருவருக்கு மரண தண்டனை!
சனி 1, ஆகஸ்ட் 2026 11:15:09 AM (IST)

பாகிஸ்தானில் டிரோன் மூலம் குண்டு வீச்சு: 11 போலீசார் பலி, 15 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
வெள்ளி 31, ஜூலை 2026 12:55:12 PM (IST)

டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் மீது சர்வதேசப் பிடிவாரண்ட்: ரஷ்யா அதிரடி நடவடிக்கை!
புதன் 29, ஜூலை 2026 4:46:39 PM (IST)

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு - மீட்புப் பணிகள் தீவிரம்!
புதன் 29, ஜூலை 2026 12:04:25 PM (IST)


