» செய்திகள் - விளையாட்டு » உலகம்
லெபனானின் 2 எண்ணெய் கப்பல்களை சிறைபிடித்த அமெரிக்கா!
வியாழன் 8, ஜனவரி 2026 12:04:28 PM (IST)

தடைகளை மீறியதற்காக லெபனானின் 2 எண்ணெய் கப்பல்களை அமெரிக்கப் படைகள் சிறைப்பிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
வெனிசுலாவுக்கு சொந்தமான டேங்கர் எண்ணெய் கப்பல் ஒன்று, லெபனானின் போராளி குழுவான ஹிஸ்புல்லாவுடன தொடர்புடைய நிறுவனத்துக்கு சரக்குகளை கொண்டு சென்றதாக கூறி ஒரு கப்பலுக்கு அமெரிக்க கடந்த 2024-ம் ஆண்டு தடை விதித்தது.
இதுபோல மேலும் ஒரு கப்பலுக்கும் சமீபத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து அந்த கப்பல்களை அமெரிக்கா கண்காணித்து தேடி வந்தது. இந்த நிலையில் லெபனானின் 2 கப்பல்களை சிறைபிடித்து பறிமுதல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
‘அமெரிக்காவின் தடைகளை மீறியதற்காக பெல்லா 1 என்ற வர்த்தகக் கப்பலையும், கரீபியன் கடலில் சோபியா என்ற எண்ணெய் கப்பலையும் அமெரிக்கப் படைகள் சிறைப்பிடித்து தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகின் இளம் பேராசிரியராக 18 வயதில் சாதனை : அமெரிக்க இளைஞருக்கு குவியும் பாராட்டு!
புதன் 5, ஆகஸ்ட் 2026 10:46:30 AM (IST)

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தம்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 10:12:10 AM (IST)

இலங்கை ஈஸ்டர் தினக் குண்டுவெடிப்பு வழக்கு : உயர் அதிகாரிகள் இருவருக்கு மரண தண்டனை!
சனி 1, ஆகஸ்ட் 2026 11:15:09 AM (IST)

பாகிஸ்தானில் டிரோன் மூலம் குண்டு வீச்சு: 11 போலீசார் பலி, 15 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
வெள்ளி 31, ஜூலை 2026 12:55:12 PM (IST)

டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் மீது சர்வதேசப் பிடிவாரண்ட்: ரஷ்யா அதிரடி நடவடிக்கை!
புதன் 29, ஜூலை 2026 4:46:39 PM (IST)

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு - மீட்புப் பணிகள் தீவிரம்!
புதன் 29, ஜூலை 2026 12:04:25 PM (IST)


