» செய்திகள் - விளையாட்டு » உலகம்
வங்கதேச வன்முறைச் சம்பவங்கள் கவலை அளிக்கிறது : ஐ.நா. பொதுச்செயலாளர்
புதன் 24, டிசம்பர் 2025 11:56:07 AM (IST)
வங்கதேசத்தில் சமீபத்தில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள், குறிப்பாக சமீப நாட்களில் இந்துக்கள் அடித்துக் கொல்லப்பட்டதாக வரும் செய்திகள் குறித்து ஐ.நா.வின் நிலைப்பாடு என்ன என்று எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பொதுச்செயலாளரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் பதிலளித்தார். அதில், வங்கதேசத்தின் நிலைமை குறித்து ஐ.நா. மிகவும் கவலைப்படுகிறது. மற்ற எந்த நாட்டையும் போலவே, பெரும்பான்மை சமூகத்தைச் சாராத மக்களும் பாதுகாப்பாக உணர வேண்டும். அனைத்து குடிமக்களுக்கும் பாதுகாப்பு அத்தியாவசியமானது. ஒவ்வொரு தனிநபரின் பாதுகாப்பையும் உறுதிசெய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் வங்கதேச அரசாங்கம் எடுக்கும் என்று ஐ.நா. எதிர்பார்ப்பதாக அவர் மேலும் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எப்ஸ்டீன் விவகாரத்தில் குற்றச்சாட்டு: பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் பதவி விலக மறுப்பு
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 8:34:38 AM (IST)

அதிர்வலைகளை ஏற்படுத்திய ஜெப்ரி எப்ஸ்டீன் ஆவணங்கள்: பாவங்களின் தீவில் நடந்தது என்ன?
ஞாயிறு 8, பிப்ரவரி 2026 10:37:23 AM (IST)

இந்தியாவை உலகோடு இணைக்கும் மொழி தமிழ்: மலேசியாவில் பிரதமர் மோடி பேச்சு
ஞாயிறு 8, பிப்ரவரி 2026 10:18:37 AM (IST)

இஸ்லாமாபாத் மசூதியில் தற்கொலை படை தாக்குதல்: 69 பேர் பலி - 169பேர் காயம்!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 5:27:24 PM (IST)

டிரம்ப்பை கொலை செய்ய முயன்றவருக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு !
வியாழன் 5, பிப்ரவரி 2026 5:09:39 PM (IST)

ஐநா கௌரவப் பட்டியலில் இந்தியா: 2026-க்கான நிதிப்பங்கை முன்கூட்டியே செலுத்தி சாதனை!
வியாழன் 5, பிப்ரவரி 2026 12:14:49 PM (IST)

