» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஜப்பானில் பொருளாதார நெருக்கடி: பிரதமர், அமைச்சர்களின் சம்பளத்தை குறைக்க முடிவு!
செவ்வாய் 11, நவம்பர் 2025 11:54:44 AM (IST)

ஜப்பானில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பிரதமர் மற்றும் அமைச்சர்களின் சம்பளத்தை குறைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
ஜப்பானில் நிலவிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக பிரதமர் ஷிகெரு இஷிபா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து அந்த நாட்டின் முதல் பெண் பிரதமராக சனே தகைச்சி (வயது 64) தேர்வு செய்யப்பட்டார். பழமைவாதியான இவர் எம்.பி.யாக இருந்த காலகட்டத்திலேயே சிக்கன நடவடிக்கையை வலியுறுத்தி வந்தார்.
இந்தநிலையில் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பல்வேறு முயற்சி எடுத்து வருகிறார். இதன் முதல்கட்டமாக பிரதமர் மற்றும் அமைச்சர்களின் சம்பளத்தை குறைக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளார். இதற்காக பொது ஊழியர் ஊதிய சட்டத்தை திருத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பான விவாதம் ஜப்பான் நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.
ஜப்பானை பொறுத்தவரை எம்.பி.க்களுக்கு ஒரு மாத சம்பளமாக அந்த நாட்டு ரூபாயில் 12.94 லட்சம் யென் (ரூ.7 லட்சத்து 42 ஆயிரம்) வழங்கப்படுகிறது. இந்த தொகையில் இருந்து பிரதமருக்கு 11.52 லட்சம் யென் (ரூ.6 லட்சத்து 60 ஆயிரத்து 429) மற்றும் அமைச்சர்களுக்கு 4.89 லட்சம் யென் (ரூ.2 லட்சத்து 81 ஆயிரத்து 497) கூடுதலாக வழங்கப்படுகிறது. ஆனால் செலவு குறைப்பு நடவடிக்கையின்படி கூடுதலாக வழங்கப்படும் தொகையில் இருந்து பிரதமர் 30 சதவீதமும், அமைச்சர்கள் 20 சதவீதமும் திருப்பி அளிக்க முடிவு செய்துள்ளனர்.
இதன்மூலம் அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் முறையே ரூ.2 லட்சத்து 24 ஆயிரத்து 589 மற்றும் ரூ.63 ஆயிரத்து 345 ஆக குறைக்கப்படும் என தலைமை அமைச்சரவை செயலாளர் மினோரு கிஹாரா தெரிவித்துள்ளார். பிரதமரின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகளும் வரவேற்பு தெரிவித்து உள்ளன. அதேசமயம் ஆளுங்கட்சியிலேயே இதற்கு சில எதிர்ப்புகளும் கிளம்பி உள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தம்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 10:12:10 AM (IST)

இலங்கை ஈஸ்டர் தினக் குண்டுவெடிப்பு வழக்கு : உயர் அதிகாரிகள் இருவருக்கு மரண தண்டனை!
சனி 1, ஆகஸ்ட் 2026 11:15:09 AM (IST)

பாகிஸ்தானில் டிரோன் மூலம் குண்டு வீச்சு: 11 போலீசார் பலி, 15 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
வெள்ளி 31, ஜூலை 2026 12:55:12 PM (IST)

டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் மீது சர்வதேசப் பிடிவாரண்ட்: ரஷ்யா அதிரடி நடவடிக்கை!
புதன் 29, ஜூலை 2026 4:46:39 PM (IST)

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு - மீட்புப் பணிகள் தீவிரம்!
புதன் 29, ஜூலை 2026 12:04:25 PM (IST)

ஜெர்மனி ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோவில் திருவிழா: அதிபர் ஃபிராங்க்-வால்டர் ஸ்டெயின்மியர் பங்கேற்பு!
செவ்வாய் 28, ஜூலை 2026 4:21:10 PM (IST)


