» செய்திகள் - விளையாட்டு » உலகம்
வாஷிங்டனை தொடர்ந்து சிகாகோவிலும் ராணுவத்தை களமிறக்க அதிபர் டிரம்ப் முடிவு
திங்கள் 25, ஆகஸ்ட் 2025 12:53:32 PM (IST)
வாஷிங்டனை தொடர்ந்து, சிகாகோவிலும் பாதுகாப்புக்கு ராணுவத்தை களமிறக்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முடிவு செய்துள்ளார்.
அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன், சிறப்பு மாவட்டமாக உள்ளது. இதன் பாதுகாப்பு மேயரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள போலீசாரால் நிர்வகிக்கப்படுகிறது. இந்நிலையில், சில வாரங்களுக்கு முன் வாஷிங்டனின் பாதுகாப்பை டிரம்ப் தன் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்தார். நகரில் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக காரணம் கூறி ராணுவத்தினரை குவித்தார்.இதே போல் கலிபோர்னி யாவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில், கடந்த ஜூனில் புலம்பெயர்ந்தோரை கைது செய்யும் நட வடிக்கையில் குடியேற்ற மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கு எதிராக கூட்டத்தினர் தாக்குதல் நடத்தினர் . இதையடுத்து லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு 4,000 ராணுவத்தினர், 700 கடற்படையினரை அனுப்பினார்.
தற்போது அதேபோல் இல்லினாய்ஸ் மாகாணம், சிகாகோ நகரம், 'குற்றங்களால் குழப்பத்தில் உள்ளது, அதை சரி செய்வோம்' என அதிபர் டிரம்ப் கூறினார். இதனால் ராணுவ தலைமையகமான பென்ட கன் சிகாகோவுக்கு ராணுவத்தை அனுப்ப திட்டமிட்டு வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் வரலாற்றுச் சிறப்புமிக்கது: அதிபர் ட்ரம்ப் பெருமிதம்!
வியாழன் 12, பிப்ரவரி 2026 12:51:01 PM (IST)

ஷேக் ஹசீனா வெளியேற்றத்திற்குப் பிறகு 18 மாதங்கள் கழித்து வங்க தேசத்தில் தேர்தல்!
வியாழன் 12, பிப்ரவரி 2026 11:55:49 AM (IST)

கனடா பள்ளி வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: 9 பேர் உயிரிழப்பு; தாக்குதல் நடத்தியர் தற்கொலை!
புதன் 11, பிப்ரவரி 2026 12:25:22 PM (IST)

எப்ஸ்டீன் விவகாரத்தில் குற்றச்சாட்டு: பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் பதவி விலக மறுப்பு
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 8:34:38 AM (IST)

அதிர்வலைகளை ஏற்படுத்திய ஜெப்ரி எப்ஸ்டீன் ஆவணங்கள்: பாவங்களின் தீவில் நடந்தது என்ன?
ஞாயிறு 8, பிப்ரவரி 2026 10:37:23 AM (IST)

இந்தியாவை உலகோடு இணைக்கும் மொழி தமிழ்: மலேசியாவில் பிரதமர் மோடி பேச்சு
ஞாயிறு 8, பிப்ரவரி 2026 10:18:37 AM (IST)

