» செய்திகள் - விளையாட்டு » உலகம்
குற்றவாளியை போல கைது செய்யப்பட்ட இந்திய மாணவர் : அமெரிக்கா விளக்கம்!
புதன் 11, ஜூன் 2025 11:41:53 AM (IST)

உயர்கல்விக்காக அமெரிக்கா சென்ற இந்திய மாணவர், சட்டவிரோதமாக நுழைந்திருப்பதாக கூறி, குற்றவாளியை போல கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 6ம் தேதி பிரபல தொழிலதிபர் குணால் ஜெயின், தனது x தளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், நியூ ஜெர்சியின் நெவார்க் விமான நிலையத்தில் இந்திய மாணவரை, அந்நாட்டு போலீசார் குற்றவாளியை போல கைது செய்ததாகவும், மாணவர் கண்ணீர் விட்டு அழுதும் கூட, அதிகாரிகள் இரக்கம்காட்டாமல், ஆயுதமேந்திய குற்றவாளியை கைது செய்வதை போல மாணவரை தாக்கினார்கள் என்றும் கூறியிருந்தார்.
மாணவர்கள் காலையில் விசா பெற்று விமானத்தில் ஏறுகிறார்கள். ஏதோ ஒரு காரணத்தால், அவர்களால் அமெரிக்க குடியுரிமை அதிகாரிகளிடம் தங்கள் வருகைக்கான காரணத்தை விளக்க முடியாமல் போகிறது. இதனால் அவர்கள் மாலையில் குற்றவாளிகளைப் போல் கைது செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்படுகிறார்கள். ஒவ்வொரு நாளும் 3-4 சம்பவங்கள் இதுபோன்று நடக்கின்றன. கடந்த சில நாட்களாக இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன" என்று கூறியிருந்தார்.
இது இந்தியாவில் கடுமையான எதிர்வினைகளை தூண்டியது. அமெரிக்க அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு பலரும் சோஷியல் மீடியாக்களில் கேள்விகளை எழுப்பியிருந்தனர். எதிர்ப்புகளுக்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்கா சில கருத்துக்களை தெரிவித்திருந்தது. ஆனால், அவை பதிலளிக்கும் தொனியில் இல்லாமல், அதிகாரத் தொனியில் இருந்திருக்கிறது.
அதாவது, "முறையான அனுமதியை பெற்று அமெரிக்காவுக்குள் வருபவர்களை வரவேற்கிறோம். அதே நேரத்தில் சட்டவிரோதமாக நுழைவது, விசா விதிமுறைகளை மீறுவது போன்ற செயல்களை அனுமதிக்க முடியாது. முறையற்ற வழிகளில் அமெரிக்காவுக்கு வருவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. சட்டத்தை மீறுவதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதில் கேள்வி என்னவெனில், விசா இல்லாமல் அமெரிக்காவுக்குள் நுழைய முடியாது. விமானங்களில் ஏறுவதற்கு விசா தேவை. அப்படியெனில் தற்போது கைது செய்யப்பட்ட மாணவர், உரிய விசாவுடன்தான் அமெரிக்காவுக்குள் நுழைந்திருக்க முடியும். அப்புறம் ஏன் காவல்துறை அவரை கைது செய்தது? என்று பலரும் கேள்விகளை எழுப்பியுள்ளனர். இதற்கான பதில் இன்னமும் கிடைக்கவில்லை.
மறுபுறம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணையை மேற்கொண்டிருப்பதாக கூறியிருக்கிறது. சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்களை, போர் கைதிகளை போல கை, கால்களில் விலங்கு போட்டு அமெரிக்கா நாடு கடத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எப்ஸ்டீன் விவகாரத்தில் குற்றச்சாட்டு: பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் பதவி விலக மறுப்பு
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 8:34:38 AM (IST)

அதிர்வலைகளை ஏற்படுத்திய ஜெப்ரி எப்ஸ்டீன் ஆவணங்கள்: பாவங்களின் தீவில் நடந்தது என்ன?
ஞாயிறு 8, பிப்ரவரி 2026 10:37:23 AM (IST)

இந்தியாவை உலகோடு இணைக்கும் மொழி தமிழ்: மலேசியாவில் பிரதமர் மோடி பேச்சு
ஞாயிறு 8, பிப்ரவரி 2026 10:18:37 AM (IST)

இஸ்லாமாபாத் மசூதியில் தற்கொலை படை தாக்குதல்: 69 பேர் பலி - 169பேர் காயம்!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 5:27:24 PM (IST)

டிரம்ப்பை கொலை செய்ய முயன்றவருக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு !
வியாழன் 5, பிப்ரவரி 2026 5:09:39 PM (IST)

ஐநா கௌரவப் பட்டியலில் இந்தியா: 2026-க்கான நிதிப்பங்கை முன்கூட்டியே செலுத்தி சாதனை!
வியாழன் 5, பிப்ரவரி 2026 12:14:49 PM (IST)


நாமJun 11, 2025 - 01:30:01 PM | Posted IP 104.2*****