» செய்திகள் - விளையாட்டு » உலகம்
போர் நிறுத்தத்தை செயல்படுத்துவதில் உறுதியாக உள்ளோம்: பாகிஸ்தான் அறிவிப்பு
திங்கள் 12, மே 2025 9:13:08 AM (IST)
‘போர் நிறுத்தத்தை உண்மையாக செயல்படுத்துவதில் உறுதியாக உள்ளோம்’ என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
இந்தியாவும், பாகிஸ்தானும் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு பிறகு நிலம், வான் மற்றும் கடல் வழியாக அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்த ஒரு உடன்பாட்டை எட்டின. ஆனால் சில மணி நேரத்திலேயே இந்த உடன்பாட்டை மீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான், இந்தியாவின் கடும் கண்டனத்தை பெற்றது. உறுதியான நடவடிக்கை எடுக்க இந்திய வெளியுறவுத்துறை வலியுறுத்தியது.
இந்த நிலையில், போர் நிறுத்த நடவடிக்கையில் உறுதியாக இருப்பதாக பாகிஸ்தான் அறிவித்து உள்ளது. அது தொடர்பாக வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, ’பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தை உண்மையாக செயல்படுத்துவதில் பாகிஸ்தான் உறுதியாக உள்ளது. பாகிஸ்தானின் படையினர் பொறுப்புடனும், நிதானத்துடனும் நிலைமையைக் கையாள்கின்றனர்’ என்று கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

புதின் அழிய வேண்டும் என்பதுதான் உக்ரைன் மக்களின் வேண்டுதல்: அதிபர் ஸெலென்ஸ்கி!
வெள்ளி 26, டிசம்பர் 2025 12:50:00 PM (IST)

போர்களை பேச்சுவார்த்தையால் மட்டுமே முடிவுக்கு கொண்டு வர முடியும்: போப் கிறிஸ்துமஸ் உரை
வெள்ளி 26, டிசம்பர் 2025 12:37:14 PM (IST)

தாய்லாந்தில் மிக பெரிய விஷ்ணு சிலை இடித்து தகர்ப்பு: இந்தியா கடும் கண்டனம்!
வியாழன் 25, டிசம்பர் 2025 5:26:09 PM (IST)

உலகம் அழிவதை கடவுள் தள்ளிப்போட்டுள்ளார் : அந்தர்பல்டி அடித்த கானா நாட்டு தீர்க்கத்தரிசி!
வியாழன் 25, டிசம்பர் 2025 11:59:58 AM (IST)

வங்கதேச வன்முறைச் சம்பவங்கள் கவலை அளிக்கிறது : ஐ.நா. பொதுச்செயலாளர்
புதன் 24, டிசம்பர் 2025 11:56:07 AM (IST)

இந்தியா-நியூசிலாந்து தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் : பேச்சுவார்த்தைகள் நிறைவு
புதன் 24, டிசம்பர் 2025 11:01:11 AM (IST)


.gif)