» செய்திகள் - விளையாட்டு » உலகம்
துபாயில் யூத மத குரு படுகொலை வழக்கு: 3 பேருக்கு மரண தண்டனை!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 11:53:15 AM (IST)
துபாயில் மால்டோவா நாட்டை சேர்ந்த யூத மத குரு சுவி கோகன் படுகொலை வழக்கில், 3 பேருக்கு மரண தண்டனை மற்றும் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

சுவி கோகன் துபாயில் உள்ள அல் வாசல் சாலை பகுதியில் யூதர்களுக்கான பிரத்யேக மளிகை கடை நடத்தி வந்தார். கடந்த 2020-ம் ஆண்டு இஸ்ரேலுடன் செய்து கொள்ளப்பட்ட ஆபிரகாம் அக்கார்டு உடன்படிக்கை மூலம் அமீரகத்தில் இஸ்ரேலியர்கள் ஏராளமானோர் வசிக்க தொடங்கினர். அவர்களுக்கான பொருட்களை இறக்குமதி செய்து சுவி கோகன் விற்பனை செய்து வந்தார்.
இந்த நிலையில் அவர் கடந்த 2024-ம் ஆண்டு அக்டோபர் 21-ந் தேதி முதல் மாயமானார். இது குறித்து துபாய் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்தநிலையில் கடந்த ஆண்டு (2024) நவம்பர் மாதம் அபுதாபியில் அவரது உடல் படுகொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து அபுதாபி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் சந்தேகத்துக்கிடமான உஸ்பெகிஸ்தானை சேர்ந்த ஒலிம்பாய் டோஹிரோவிச் (28), மக்முத்ஜோன் அப்துல்ரஹிம் (28) மற்றும் அசிஸ்பெக் கமிலோவிச் (33) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர், கொலைக்கு உடந்தையாக இருந்த மற்றொருவரும் கைது செய்யப்பட்டார்.தொடர்ந்து அரசு பொது வழக்குத்துறை புலன் விசாரணை செய்ய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
இதையடுத்து, இந்த வழக்கு அபுதாபி மேல்முறையீட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவில் நேற்று தீர்ப்பு வெளியானது. இதில் குற்றம் சாட்டப்பட்ட உஸ்பெகிஸ்தானை சேர்ந்த 3 பேரின் குற்றம் சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப்பட்டதால் அவர்களுக்கு மரண தண்டனை விதிப்பதாக அபுதாபி மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் உடந்தையாக இருந்த மற்றொரு நபருக்கு ஆயுள் தண்டனை விதித்தும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போதைப் பொருள் தயாரிப்பில் இந்தியா, சீனா முக்கிய பங்கு : ட்ரம்ப் குற்றச்சாட்டு!
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:39:20 PM (IST)

இந்தியா உடனான போர் நிறுத்தத்தில் டிரம்ப் தலையீடு இல்லை: பாகிஸ்தான் அமைச்சர்
புதன் 17, செப்டம்பர் 2025 5:26:19 PM (IST)

நண்பர் மோடி பிறந்தநாளில் ஓர் அற்புதமான தொலைபேசி உரையாடல்: ட்ரம்ப் நெகிழ்ச்சி!
புதன் 17, செப்டம்பர் 2025 12:04:25 PM (IST)

நாய் என திட்டியதால் பெண் ஊழியர் தற்கொலை: குடும்பத்துக்கு ரூ.90 கோடி இழப்பீடு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 10:27:31 AM (IST)

இங்கிலாந்தில் புலம்பெயர்ந்தோர் குடியேற்றத்துக்கு எதிராக பொதுமக்கள் மாபெரும் போராட்டம்!!
திங்கள் 15, செப்டம்பர் 2025 11:33:58 AM (IST)

பின்லேடன் உங்கள் நாட்டில்தான் கொல்லப்பட்டார் : ஐ.நா. சபையில் பாக். மீது இஸ்ரேல் தாக்கு!
சனி 13, செப்டம்பர் 2025 5:04:44 PM (IST)
