» செய்திகள் - விளையாட்டு » உலகம்
சிங்கப்பூரில் மலேசிய தமிழரின் தூக்குதண்டனை கடைசி நேரத்தில் நிறுத்தம்: நீதிமன்றம் உத்தரவு
வியாழன் 20, பிப்ரவரி 2025 10:03:07 PM (IST)
சிங்கப்பூரில் மலேசிய தமிழரின் தூக்குதண்டனை கடைசி நேரத்தில் நிறுத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மலேசியாவைச் சோ்ந்த தமிழ் வம்சாவளி வாலிபர் பன்னீா் செல்வம் பரந்தாமன். இவர் 52 கிராம் ஹெராயின் போதைப் பொருளுடன் சிங்கப்பூரில் கடந்த 2014-ம் ஆண்டு கைது செய்யப்பட்டாா். சிங்கப்பூா் சட்டப்படி 15 கிராமுக்கு மேல் ஹெராயி–னுடன் ஒருவா் பிடிபட்டால் மரண தண்டனை விதிக்க முடியும். அதன்படி பன்னீர்செல்வத்துக்கு கடந்த 2017-ம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
பன்னீா் செல்வத்துக்கு தெரியாமலேயே அவரிடம் ஹெராயின் கொடுத்து அனுப்பப்பட்டதால் தூக்கு தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும் என்று சா்வதேச மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தது. இதுதொடர்பாக போராட்–டங்கள் நடந்தன. ஆனால் பன்னீர்செல்வத்துக்கு இன்று தூக்கு தண்டனையை நிறை–வேற்ற சிங்கப்பூர் சிறைத்துறை அதிகாரிகள் முடிவு செய்திருந்தனா்.
இந்த நிலையில் சிங்கப்பூரை சேர்ந்த மரண தண்டனை எதிர்ப்பு ஆர்வலர் கிர்ஸ்டன் ஹெய்ன் என்பவர் பன்னீர் செல்வத்தின் மரண தண்டனையை நிறுத்திவைக்க கோரி கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். போதைப் பொருள் வழக்குகளில் மரண தண்டனை விதிப்பதற்கு எதி ரான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதாலும், பன்னீர் செல்வம் நேரடியாக குற்றச் செயலில் ஈடுபடாத–தாலும் தண்ட–னையை நிறுத்தி வைக்குமாறு கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட கோர்ட்டு, பன்னீர் செல்வத்தின் தண்டனையை நிறுத்திவைக்க சிறைத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போதைப் பொருள் தயாரிப்பில் இந்தியா, சீனா முக்கிய பங்கு : ட்ரம்ப் குற்றச்சாட்டு!
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:39:20 PM (IST)

இந்தியா உடனான போர் நிறுத்தத்தில் டிரம்ப் தலையீடு இல்லை: பாகிஸ்தான் அமைச்சர்
புதன் 17, செப்டம்பர் 2025 5:26:19 PM (IST)

நண்பர் மோடி பிறந்தநாளில் ஓர் அற்புதமான தொலைபேசி உரையாடல்: ட்ரம்ப் நெகிழ்ச்சி!
புதன் 17, செப்டம்பர் 2025 12:04:25 PM (IST)

நாய் என திட்டியதால் பெண் ஊழியர் தற்கொலை: குடும்பத்துக்கு ரூ.90 கோடி இழப்பீடு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 10:27:31 AM (IST)

இங்கிலாந்தில் புலம்பெயர்ந்தோர் குடியேற்றத்துக்கு எதிராக பொதுமக்கள் மாபெரும் போராட்டம்!!
திங்கள் 15, செப்டம்பர் 2025 11:33:58 AM (IST)

பின்லேடன் உங்கள் நாட்டில்தான் கொல்லப்பட்டார் : ஐ.நா. சபையில் பாக். மீது இஸ்ரேல் தாக்கு!
சனி 13, செப்டம்பர் 2025 5:04:44 PM (IST)
