» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இங்கிலாந்தில் புலம்பெயர்ந்தோர் குடியேற்றத்துக்கு எதிராக பொதுமக்கள் மாபெரும் போராட்டம்!!
திங்கள் 15, செப்டம்பர் 2025 11:33:58 AM (IST)

இங்கிலாந்தில் புலம்பெயர்ந்தோர் குடியேற்றத்துக்கு எதிராக பொதுமக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். வன்முறையில் 25 போலீசார் படுகாயம் அடைந்தனர்.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் புதிய குடியேற்ற மசோதாவை அறிவித்து சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களை கைது செய்து நாடு கடத்தி வருகிறார். மேலும் ஓரின சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் ஆகியோருக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதனால் பெரும்பாலானவர்கள் அங்கிருந்து வெளியேறி இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்து வருகிறார்கள்.
இதனால் தங்களுக்கு கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்புகள், பதவிகள், அதிகார சலுகைகள் பறிபோவதாக அந்த நாட்டினர் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்கள். தீவிர வலதுசாரி ஆதரவாளரான டாமி ராபின்சன் தலைமையில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அந்தவகையில் நேற்று தலைநகர் லண்டனை முற்றுகையிட்டு வெளிநாட்டினர், புலம்பெயர்ந்தவர்கள், அகதிகள் குடியேற்றத்துக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடந்தது. போராட்ட பேரணியில் சுமார் 1½ லட்சம் பேர் திரண்டனர். இதனால் லண்டன் நகரம் குலுங்கியது.
போராட்டக்காரர்கள் தேசிய கொடி ஏந்தி வந்தனர். இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு எதிராக பதாகைகளை கையில் வைத்திருந்தனர். டாமி ராபின்சனுக்கு எதிராக மற்றொரு தரப்பை சேர்ந்த சுமார் 10 ஆயிரம் பேர் இந்த பேரணியில் பங்கேற்றனர். இருதரப்பினரும் ஒரே இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி போட்டிப்போட்டு கோஷமிட்டனர்.
அப்போது இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. தடுக்க முயன்ற 26 போலீசார் படுகாயம் அடைந்தனர். இருந்தபோதிலும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதில் 25 பேர் கைது செய்யப்பட்டனர். உலக பணக்காரர்களில் ஒருவரும், பிரபல தொழிலதிபருமான எலான் மஸ்க் புலம்பெயர்ந்தோர் குடியேற்றத்துக்கு எதிரான பேரணியை ஆதரித்தார்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் வீடியோ காலில் அவர் பேசினார். அப்போது அவர், "நீங்கள் வன்முறையை தேர்ந்தெடுக்காவிட்டாலும், அது உங்களை தேடி வருகிறது. எதிர்த்து போராட வேண்டும் அல்லது சாக வேண்டும். கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான அரசை கவிழ்க்க வேண்டும்” என அறைகூவல் விடுத்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வங்கதேச வன்முறைச் சம்பவங்கள் கவலை அளிக்கிறது : ஐ.நா. பொதுச்செயலாளர்
புதன் 24, டிசம்பர் 2025 11:56:07 AM (IST)

இந்தியா-நியூசிலாந்து தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் : பேச்சுவார்த்தைகள் நிறைவு
புதன் 24, டிசம்பர் 2025 11:01:11 AM (IST)

இந்தியா - பாகிஸ்தான் அணு ஆயுதப்போரை தடுத்து நிறுத்தினேன்: டிரம்ப்
செவ்வாய் 23, டிசம்பர் 2025 11:11:03 AM (IST)

டித்வா’ புயல் பாதிப்பு: இலங்கைத் தமிழா்களுக்கு இந்திய தூதரகம் நிவாரணம்
திங்கள் 22, டிசம்பர் 2025 10:20:10 AM (IST)

வங்கதேசத்தில் இந்துக்களை குறிவைத்து வன்முறை: இந்தியாவுக்கு எதிராக போராட்டம் தீவிரம்!
சனி 20, டிசம்பர் 2025 10:46:38 AM (IST)

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்து
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:18:42 AM (IST)


.gif)