» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பணயக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் எட்டப்பட்டது: இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு!
வெள்ளி 17, ஜனவரி 2025 10:59:12 AM (IST)
பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பான ஒப்பந்தம் எட்டப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

போர் காரணமாக இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஒருபக்கம் ஏற்பட்ட நிலையில், மறுப்பக்கம் அப்பாவி பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்படுவதாக சர்வதேச அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் உலக நாடுகள் தொடர்ந்து வருத்தம் தெரிவித்து வந்தன. இந்த நிலையில், இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் பணிகளில் அமெரிக்கா மற்றும் கத்தார் ஈடுபட்டன.
அமெரிக்கா மற்றும் கத்தார் மத்தியஸ்தம் செய்து இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நீண்ட காலமாக நடைபெற்றது. இந்த நிலையில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் முடிவுக்கு வருவதாக அமெரிக்கா மற்றும் கத்தார் கடந்த புதன் கிழமை அறிவித்தது. இந்த நிலையில், போர் நிறுத்தம் மற்றும் அதற்கு பிந்தைய வழிமுறைகள் குறித்து இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
அதன்படி, பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பான ஒப்பந்தம் எட்டப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் அமைச்சரவை கூட்டம் இன்று கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
"பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தம் குறித்து நிபந்தனைகள் எட்டப்பட்டுள்ளதாக பேச்சுவார்த்தை குழுவால் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுக்குத் தெரிவிக்கப்பட்டது," என்று அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடைசி நிமிட சலுகைகளை பெறுவதற்காக ஒப்பந்தத்தின் முக்கிய பகுதிகளை ஹமாஸ் மறுத்ததாக அவரது அலுவலகம் வியாழக்கிழமை குற்றம் சாட்டி இருந்தது. இந்த குற்றச்சாட்டை ஹமாஸ் மறுத்தது.
"பிரதமர் அரசியல்-பாதுகாப்பு அமைச்சரவையை கூட்ட உத்தரவிட்டார். பின்னர் ஒப்பந்தத்தை அங்கீகரிக்க அரசாங்கம் கூடும்," என்று நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பணயக்கைதிகளின் குடும்பங்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும், அவர்கள் திரும்பியதும் அவர்களைப் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அது மேலும் கூறியது.
இஸ்ரேலிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தால், போர் நிறுத்த ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வரும். இதைத் தொடர்ந்து பாலஸ்தீன கைதிகளுக்கு இஸ்ரேலிய பணயக்கைதிகளை பரிமாறிக்கொள்வது, போருக்கு நிரந்தர முடிவுக்கான விதிமுறைகள் இறுதி செய்யப்படும்.
போர் நிறுத்தம் தொடர்பான அறிவிப்பை மத்தியஸ்தர்களான கத்தார் மற்றும் அமெரிக்கா கடந்த புதன் கிழமை அறிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எல்லை பிரச்சினையில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: சீனா அறிவிப்பு!
செவ்வாய் 1, ஜூலை 2025 5:41:09 PM (IST)

கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் செல்ல நேரிடும்: எலான் மஸ்க்குக்கு டிரம்ப் எச்சரிக்கை!
செவ்வாய் 1, ஜூலை 2025 3:35:48 PM (IST)

பரஸ்பர வரிவிதிப்பிற்கான கால அவகாசத்தை நீட்டிக்கும் திட்டம் இல்லை: டொனால்டு டிரம்ப்
திங்கள் 30, ஜூன் 2025 4:50:14 PM (IST)

மனைவி விவாகரத்தால் விரக்தி : ஓடும் ரயிலுக்குள் தீவைத்த 67 வயது நபர் கைது!
சனி 28, ஜூன் 2025 12:23:38 PM (IST)

பிரான்ஸ் நாட்டில் வெளுத்து வாங்கும் கனமழை: நாடாளுமன்றத்தில் மழைநீர் கசிந்ததால் பரபரப்பு!
வெள்ளி 27, ஜூன் 2025 5:13:47 PM (IST)

இந்தியா - அமெரிக்கா இடையே மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் : அதிபர் டிரம்ப் தகவல்!
வெள்ளி 27, ஜூன் 2025 5:05:09 PM (IST)
