» செய்திகள் - விளையாட்டு » உலகம்
24 மணி நேரமும் படுத்தே இருக்க வேண்டும்! சோம்பேறி பட்டத்திற்கு போட்டா போட்டி!
வெள்ளி 15, செப்டம்பர் 2023 5:34:38 PM (IST)

மாண்டினீக்ரோ நாட்டில் 24 மணி நேரமும் படுத்தே இருக்கும் 'சோம்பேறிக் குடிமகன்' என்ற விநோத போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான மாண்டினீக்ரோவில், 'சோம்பேறி குடிமகன்' என்ற பட்டத்தை வெல்வதற்காக விநோதமான போட்டி ஒன்று நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் எந்த வேலையும் செய்யாமல், 24 மணி நேரமும் மெத்தையில் படுத்தே இருக்க வேண்டும் என்பதே இந்த போட்டியின் முக்கிய விதிமுறையாகும்.
போட்டியாளர்கள் 8 மணி நேரத்திற்கு ஒரு முறை கழிப்பறைக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மற்ற நேரங்களில் எழுந்து நிற்கவோ அல்லது உட்காரவோ கூடாது. இதனை மீறினால் போட்டியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்படுவார்கள். அதே சமயம் போட்டியாளர்கள் செல்போன், லேப்டாப் பயன்படுத்தவும், புத்தகம் படிக்கவும் அனுமதி உண்டு.
சுமார் ஒரு மாத காலமாக இந்த போட்டி நடைபெற்று வருகிறது. தொடக்கத்தில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 7 பேர் மெத்தையில் படுத்தபடி வெற்றிக்காக 'போராடி' வருகின்றனர். இதில் வெற்றி பெறும் போட்டியாளருக்கு 'சோம்பேறி குடிமகன்' என்ற பட்டத்தோடு, 1,000 யூரோக்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.88,000) பரிசுத்தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் காசாவுக்கு ஆதரவாக போராட்டம் : 65 மாணவர்கள் சஸ்பெண்ட்
ஞாயிறு 11, மே 2025 10:29:53 AM (IST)

இலங்கை விமானப்படை ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்து: 6 வீரர்கள் உயிரிழப்பு
சனி 10, மே 2025 5:21:00 PM (IST)

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றத்திற்கு சமுகத் தீர்வு காண வேண்டும் : சீனா வலியுறுத்தல்!
சனி 10, மே 2025 12:22:37 PM (IST)

இந்தியா - பாகிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கத் தயார்: அமெரிக்க வெளியுறவு அமைச்சர்
சனி 10, மே 2025 12:01:16 PM (IST)

போர் பதற்றம்: பாகிஸ்தானின் லாகூர் பகுதியில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு!
வியாழன் 8, மே 2025 5:37:08 PM (IST)

இந்தியா நடத்திய தாக்குதலில் மசூத் அசார் குடும்பத்தினர் 10 பேர் பலி!
புதன் 7, மே 2025 4:49:10 PM (IST)
