» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஒடிசா ரயில் விபத்து மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது: பாகிஸ்தான், ரஷியா இரங்கல்!
சனி 3, ஜூன் 2023 4:51:02 PM (IST)
ஒடிசா ரயில் விபத்து மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஒடிசா ரயில் விபத்து மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் , இந்தியாவில் நடந்த ரயில் விபத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்திருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இந்த துயரச் சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் . என தெரிவித்துள்ளார்.
ரஷிய அதிபர்
இந்த நிலையில், ஒடிசா ரெயில் விபத்து குறித்து ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "இந்திய மாநிலம் ஒடிசாவில் ஏற்பட்டுள்ள ரயில் விபத்து வேதனையளிக்கிறது" "உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்; காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்". என்று அவர் தெரிவித்து உள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரஷிய-வட கொரிய ராணுவ ஒத்துழைப்பு அபாயகரமானது : தென் கொரியா எச்சரிக்கை!
வெள்ளி 22, செப்டம்பர் 2023 10:51:32 AM (IST)

நீதியை நிலைநாட்ட இந்திய அரசு எங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்: ஜஸ்டின் ட்ரூடோ
வெள்ளி 22, செப்டம்பர் 2023 9:54:28 AM (IST)

ஐ.நா. சபையில் காஷ்மீர் பிரச்சனையை மீண்டும் எழுப்பிய துருக்கி அதிபர்: இந்தியா கண்டனம்
வியாழன் 21, செப்டம்பர் 2023 12:17:29 PM (IST)

கனடாவில் மேலும் ஒரு காலிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை: என்.ஐ.ஏ.வால் தேடப்பட்டவர்!
வியாழன் 21, செப்டம்பர் 2023 11:53:01 AM (IST)

இந்தியா அடைந்த சாதனைகளை பாகிஸ்தானால் அடைய முடியவில்லை: நவாஸ் ஷெரீப் பேச்சு
புதன் 20, செப்டம்பர் 2023 12:37:54 PM (IST)

உக்ரைனில் ரஷியா இனப்படுகொலை: ஐ.நா. பொது சபையில் ஜெலன்ஸ்கி குறற்ச்சாட்டு!
புதன் 20, செப்டம்பர் 2023 10:19:06 AM (IST)
