» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அருணாச்சல் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி: அமெரிக்கா அறிவிப்பு!
வியாழன் 6, ஏப்ரல் 2023 5:01:40 PM (IST)
அருணாச்சல் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

சீனாவின் சிவில் விவகார அமைச்சகம் வெளியிட்ட இந்தப் பட்டியலில் 2 நிலப் பகுதிகள், 2 குடியிருப்பு பகுதிகள் 5 மலைச்சிகரங்கள், 2 ஆறுகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. சீனாவின் இந்த நடவடிக்கைகளுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அருணாச்சல் விவகாரத்தில் அமெரிக்கா கருத்து கூறியுள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை தரப்பில், "அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அமெரிக்கா அங்கீகரித்துள்ளது. இதில் ஒருதலைபட்சமான சீனாவின் நடவடிக்கையை அமெரிக்கா எதிர்க்கிறது” என்று தெரிவித்துள்ளது. அருணாச்சலப் பிரதேச பகுதிகளுக்கு சீனா இதுபோல் மறு பெயரிடுவது இது மூன்றாவது முறையாகும். இதற்கு முன் 2017-ல் 6 இடங்களுக்கும் 2021-ல்15 இடங்களுக்கும் சீனா புதிய பெயரை சூட்டியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரஷிய-வட கொரிய ராணுவ ஒத்துழைப்பு அபாயகரமானது : தென் கொரியா எச்சரிக்கை!
வெள்ளி 22, செப்டம்பர் 2023 10:51:32 AM (IST)

நீதியை நிலைநாட்ட இந்திய அரசு எங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்: ஜஸ்டின் ட்ரூடோ
வெள்ளி 22, செப்டம்பர் 2023 9:54:28 AM (IST)

ஐ.நா. சபையில் காஷ்மீர் பிரச்சனையை மீண்டும் எழுப்பிய துருக்கி அதிபர்: இந்தியா கண்டனம்
வியாழன் 21, செப்டம்பர் 2023 12:17:29 PM (IST)

கனடாவில் மேலும் ஒரு காலிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை: என்.ஐ.ஏ.வால் தேடப்பட்டவர்!
வியாழன் 21, செப்டம்பர் 2023 11:53:01 AM (IST)

இந்தியா அடைந்த சாதனைகளை பாகிஸ்தானால் அடைய முடியவில்லை: நவாஸ் ஷெரீப் பேச்சு
புதன் 20, செப்டம்பர் 2023 12:37:54 PM (IST)

உக்ரைனில் ரஷியா இனப்படுகொலை: ஐ.நா. பொது சபையில் ஜெலன்ஸ்கி குறற்ச்சாட்டு!
புதன் 20, செப்டம்பர் 2023 10:19:06 AM (IST)
