» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பாகிஸ்தானில் இலவச பொருட்களை வாங்க கூட்ட நெரிசல்: குழந்தைகள் உள்பட 12 பேர் பலி!
சனி 1, ஏப்ரல் 2023 3:30:12 PM (IST)

பாகிஸ்தானில் இலவச ரேஷன் பொருட்களை வாங்க மக்கள் குவிந்ததால் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உள்பட 12 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பணவீக்கம், வறுமை, வெள்ளம் போன்ற பிரச்சனைகளால் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ள பாகிஸ்தானில் பசியும், பட்டினியாக மக்கள் தவித்து வரும் நிலையில் கராச்சி மாகாணம் சிந்து தொழிற்பேட்டை பகுதியில் தொண்டு நிறுவனம் சார்பில் இலவச ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டன. அதை வாங்க நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்ததால் நெரிசல் ஏற்பட்டது.
இந்த நெரிசலில் மூச்சு திணறி பெண்கள், குழந்தைகள் என 12 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பிரதமரே காரணம் என குற்றம் சாட்டிய பெண்கள், சமையல் எரிவாயு சிலிண்டர், குடிநீர், மின்சாரம், அரிசி உள்ளிட்டவை கிடைக்காமல் மக்கள் செத்து மடிவதாக கூறினர். முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் இலவச ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்த தொண்டு நிறுவனத்தின் நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

2025ஆம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு
திங்கள் 13, அக்டோபர் 2025 5:21:39 PM (IST)

வர்த்தக போரை விரும்பவில்லை; அமெரிக்காவின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம் - சீனா உறுதி
திங்கள் 13, அக்டோபர் 2025 12:02:17 PM (IST)

ராஜினாமா செய்த 4 நாட்களில் பிரான்ஸ் பிரதமராக செபாஸ்டியன் மீண்டும் நியமனம்
ஞாயிறு 12, அக்டோபர் 2025 11:24:27 AM (IST)

படைகள் வாபஸ் பெறப்பட்டன காசா போர்நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது
சனி 11, அக்டோபர் 2025 4:30:39 PM (IST)

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே பாதுகாப்பு ஒப்பந்தங்கள் : ராஜ்நாத் சிங் முன்னிலையில் கையெழுத்து
வெள்ளி 10, அக்டோபர் 2025 9:25:54 PM (IST)

வெனிசுவேலாவைச் சேர்ந்த பெண்ணுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு: டிரம்புக்கு ஏமாற்றம்!
வெள்ளி 10, அக்டோபர் 2025 4:24:43 PM (IST)
