» செய்திகள் - விளையாட்டு » உலகம்
மகிந்த ராஜபட்ச வெளிநாடு தப்பிச் செல்ல திட்டம்: பசில் ராஜபட்ச வீட்டிற்கு தீ வைப்பு
செவ்வாய் 10, மே 2022 5:35:33 PM (IST)

இலங்கையில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபட்சவின் வீட்டிற்குப் தீவைக்கப்பட்டதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் திடீா் திருப்பமாக, பிரதமா் மகிந்த ராஜபட்ச (76) தனது பதவியை நேற்று திங்கள்கிழமை ராஜிநாமா செய்தாா். அதிபா் அலுவலகத்துக்கு எதிரே தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் மீது அவரின் ஆதரவாளா்கள் தாக்குதல் நடத்திய சில மணி நேரத்தில் ராஜிநாமா முடிவை மகிந்த ராஜபட்ச அறிவித்தாா்.
இதற்கிடையே, தலைநகா் கொழும்பில் பிரதமரின் இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவா்கள் மீது மகிந்த ராஜபட்சவின் ஆதரவாளா்கள் திடீா் தாக்குதலில் ஈடுபட்டனா். ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் பொலநருவா மாவட்டத்தைச் சோ்ந்த எம்.பி.யான அமரகீா்த்தி அதுகொரளாவை வடமேற்கு நகரமான நிதம்புவாவில் அரசுக்கு எதிரான போராட்டக்காரா்கள் சூழ்ந்துபோது அதுகொரளாவின் வாகனத்தில் இருந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும், இதனால் கோபமடைந்த போராட்டக்காரா்கள் அவரது வாகனத்தை தாக்கி கவிழ்த்ததாகவும் கூறப்படுகிறது.
போராட்டக்காரா்களிடம் இருந்து தப்பிக்க அதுகொரளாவும் அவரது பாதுகாவலரும் அருகே உள்ள கட்டடத்தில் தஞ்சமடைந்ததாகவும், அந்தக் கட்டடத்தை போராட்டக்காரா்கள் சூழ்ந்த நிலையில் அதுகொரளாவும் அவரது பாதுகாவரும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டனா் எனவும் தகவல்கள் வெளியாகின.மேலும் போராட்டக்காரர்கள் திங்கள்கிழமை இரவு மகிந்த ராஜபட்சவின் வீட்டிற்கு தீ வைத்தனர். இதனால், இலங்கையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இன்றும் மக்களிடமிருந்து தப்பிக்க மகிந்த ராஜபட்ச வெளிநாடு தப்பிச் செல்ல வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியான நிலையில் தற்போது கடற்படை தளபதி வீட்டில் தஞ்சமடைந்துள்ள ராஜபட்சவை போராட்டக்காரர்கள் சுற்றிவளைத்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், அரசிற்கு எதிரான மக்களின் போராட்டம் தொடர்ந்து வருகிற நிலையில் மகிந்த ராஜபட்சவின் சகோதரரும் இலங்கையின் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபட்சவின் வீட்டிற்குப் போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு: விமானங்கள் ரத்து - பயணிகள் அவதி!!
சனி 27, டிசம்பர் 2025 12:31:05 PM (IST)

புதின் அழிய வேண்டும் என்பதுதான் உக்ரைன் மக்களின் வேண்டுதல்: அதிபர் ஸெலென்ஸ்கி!
வெள்ளி 26, டிசம்பர் 2025 12:50:00 PM (IST)

போர்களை பேச்சுவார்த்தையால் மட்டுமே முடிவுக்கு கொண்டு வர முடியும்: போப் கிறிஸ்துமஸ் உரை
வெள்ளி 26, டிசம்பர் 2025 12:37:14 PM (IST)

தாய்லாந்தில் மிக பெரிய விஷ்ணு சிலை இடித்து தகர்ப்பு: இந்தியா கடும் கண்டனம்!
வியாழன் 25, டிசம்பர் 2025 5:26:09 PM (IST)

உலகம் அழிவதை கடவுள் தள்ளிப்போட்டுள்ளார் : அந்தர்பல்டி அடித்த கானா நாட்டு தீர்க்கத்தரிசி!
வியாழன் 25, டிசம்பர் 2025 11:59:58 AM (IST)

வங்கதேச வன்முறைச் சம்பவங்கள் கவலை அளிக்கிறது : ஐ.நா. பொதுச்செயலாளர்
புதன் 24, டிசம்பர் 2025 11:56:07 AM (IST)



.gif)