» செய்திகள் - விளையாட்டு » உலகம்
கரோனா அச்சுறுத்தல் எதிரொலி: திருமணத்தை ஒத்தி வைத்தார் நியூசிலாந்து பிரதமர்!
திங்கள் 24, ஜனவரி 2022 4:34:47 PM (IST)
கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் தன் திருமணத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்.

இந்த புதிய கட்டுப்பாடுகள் அடுத்த மாதம் இறுதிவரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் வெளியிட்டார். இந்நிலையில் இந்த கட்டுப்பாடுகள் காரணமாக பிரதமர் ஜெசிந்தா, தன் திருமணத்தை தற்காலிகமாக நிறுத்தி உள்ளார்.கடந்த 2013ம் ஆண்டு முதல் கிளார்க் கேபோர்ட், 45, என்பவருடன் பிரதமர் ஜெசிந்தா ஒன்றாக வாழ்ந்து வருகிறார்.
கிளார்க்கை திருமணம் செய்துகொள்ளாமல் இருந்து வரும் ஜெசிந்தா, 2018ல் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இவர்கள் அடுத்த மாதம் அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருந்தனர். தேதி குறித்த விபரங்கள் எதுவும் வெளியிடப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் கரோனா கட்டுப்பாடுகளால் தன் திருமணத்தை ஜெசிந்தா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஓடிடி தளங்களால் இந்திய திரைப்பட துறையில் தலைகீழ் மாற்றம்: மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்
வியாழன் 19, மே 2022 4:59:40 PM (IST)

இலங்கையில் முள்ளிவாய்க்கால் 13-ஆவது நினைவு தினம்: முதல் முறையாக சிங்களா்கள் அஞ்சலி!
வியாழன் 19, மே 2022 11:03:03 AM (IST)

சீனாவில் 133 பேரின் சாவுக்கு விமானியே காரணம்: கருப்பு பெட்டி மூலம் கிடைத்த பகீர் தகவல்..!!
புதன் 18, மே 2022 4:49:04 PM (IST)

சினிமா உலகத்திற்கு புதிய சார்லி சாப்ளின் தேவை: கேன்ஸ் திரைப்பட விழாவில் உக்ரைன் அதிபர் பேச்சு
புதன் 18, மே 2022 4:22:32 PM (IST)

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
செவ்வாய் 17, மே 2022 5:46:50 PM (IST)

பிரான்ஸ் புதிய பிரதமராக எலிசபெத் போர்னி நியமனம் : அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உத்தரவு
செவ்வாய் 17, மே 2022 4:55:18 PM (IST)
