» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஒமிக்ரான் வைரஸ் குறித்து மக்கள் பீதியடைய தேவையில்லை அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
செவ்வாய் 30, நவம்பர் 2021 11:02:47 AM (IST)
ஒமிக்ரான் வைரஸ் கவலைக்குரியது. அதே வேளையில் மக்கள் பீதியடைய தேவையில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ஒமிக்ரான் கரோனா வைரஸ் குறித்து உலகமே அச்சத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலாக கண்டறியப்பட்டுள்ள இந்த வகை கரோனா ஐரோப்பிய நாடுகளிலும் வேகமாக கால் பதித்து வருகிறது. ஒமிக்ரான் பரவலால் தென் ஆப்பிரிக்காவில் வேகமாக கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒமிக்ரான் கரோனா வைரஸ் உலக அளவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், பல்வேறு நாடுகள் தங்கள் எல்லைகளை மூடி வெளிநாட்டு பயணங்களுக்கு தடை விதித்துள்ளது.இந்நிலையில், நேற்று வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் ஜோ பைடன், ஒமிக்ரான் வைரஸ் திரிபு கவலைக்குரியதே... அதேவேளை இது மக்கள் பீதியடைய தேவையில்லை. முழு முடக்கம், ஊரடங்கு போன்றவை இல்லாமல் தடுப்பூசி செலுத்தும் பணிகளை அதிகரித்தல், பூஸ்டர் டோஸ், பரிசோதனை உள்ளிட்டவற்றவை அதிகரிப்பதன் மூலம் குளிர்காலத்தில் நாம் எவ்வாறு இந்த வைரசுக்கு எதிராக போராட உள்ளோம் என்பது குறித்து நான் விரிவான திட்டங்களை முன்வைக்கிறேன்’ என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலக அளவில் நிம்மதி: அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம்! எண்ணெய் விநியோகம் சீராகும்!
திங்கள் 15, ஜூன் 2026 3:52:24 PM (IST)

அமெரிக்கா - ஈரான் இடையே சமரச தூதராகப் பாகிஸ்தான் வெற்றி: ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
ஞாயிறு 14, ஜூன் 2026 1:13:05 PM (IST)

இந்திய கப்பல்கள் மீதான தாக்குதலைத் திசைதிருப்ப டிரம்ப் முயற்சி: ஈரான் பகிரங்கக் குற்றச்சாட்டு!
சனி 13, ஜூன் 2026 12:02:06 PM (IST)

இந்திய மாம்பழங்களின் இறக்குமதிக்கு எந்தவிதத் தடையும் இல்லை: நேபாள அரசு விளக்கம்!
வெள்ளி 12, ஜூன் 2026 10:52:52 AM (IST)

ஹார்முஸ் நீரிணையை முழுமையாக மூடியது ஈரான் ராணுவம்: மீறும் கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு..!
வியாழன் 11, ஜூன் 2026 5:27:20 PM (IST)

ஹெலிகாப்டர் விபத்தால் வெடித்த மோதல்: ஈரான் மீது 2-ஆவது நாளாக அமெரிக்கா தாக்குதல்!
வியாழன் 11, ஜூன் 2026 12:31:12 PM (IST)


