» செய்திகள் - விளையாட்டு » உலகம்
துர்கா பூஜை விழாவின்போது கோயில்கள் மீது தாக்குதல் : நடவடிக்கை எடுக்க பிரதமர் உத்தரவு!
வெள்ளி 15, அக்டோபர் 2021 3:35:24 PM (IST)
வங்கதேசத்தில் துர்கா பூஜை கொண்டாட்டத்தின்போது இந்து கோயில்கள் மீது தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க பிரதமர் ஷேக் ஹசீனா உத்தரவிட்டுள்ளார்.
இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் வங்கதேசத்தில் சிறுபான்மை யினரை பாதுகாக்க போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா விளக்கம் அளித்துள்ளார். துர்கா பூஜை கொண்டாட்டத்தின்போது இந்து கோயில்கள் இடிக்கப்பட்டதையடுத்து அங்கு வன்முறை வெடித்தது. இதில், நான்கு பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, 22 மாவட்டங்களில் துணை ராணுவ படையை குவிக்க ஷேக் ஹசீனா உத்தரவு பிறப்பித்தார்.தலைநகர் டாக்காவில் உள்ள தகேஸ்வரி தேசிய கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சி கலந்து கொண்டு பேசிய ஹசீனா, "கொமில்லாவில் நடந்த சம்பவங்கள் குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. யாரையும் விட்டு விட மாட்டோம். அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பது முக்கியமல்ல. அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்.
தாக்குதல் சம்பவம் குறித்து நிறைய தகவல்கள் கிடைத்துள்ளன. சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தொழில்நுட்பத்தை வைத்து கண்டிப்பாக கண்காணிக்கப்போம்" என்றார். வன்முறைக்கு பின்னணியில் இருப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்திருந்தது.
வன்முறையின்போது அங்கிருந்த துர்கா சிலைகள் உடைக்கப்பட்டு அதன் மீது கல் வீசப்பட்டு இந்து கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. துர்கா சிலைகளை ஒரு கும்பல் தாக்குவது போன்ற விடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, இதுகுறித்து கருத்து தெரிவித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, "வங்கதேசத்தில் மதக் கூட்டத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இம்மாதிரியான அசம்பாவிதங்கள் கவலை அளிக்கும் விதமாக உள்ளது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதை உறுதி செய்ய சம்பவ இடத்தில் பாதுகாப்பு படையினர் உடனடியாக குவிக்கப்பட்டிருப்பதை கருத்தில் கொள்கிறோம்" என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டிரம்ப்பின் கோல்டு கார்டு விசா திட்டத்துக்கு தடை கோரி அமெரிக்காவின் 20 மாகாணங்கள் வழக்கு!
சனி 13, டிசம்பர் 2025 12:46:26 PM (IST)

பாதுகாப்பு உத்தரவாதம் அளித்தால் தேர்தல் நடத்த தயார்: டிரம்ப் புகாருக்கு ஜெலன்ஸ்கி பதிலடி!
வியாழன் 11, டிசம்பர் 2025 12:46:04 PM (IST)

ஜகார்த்தாவில் தனியார் அலுவலகத்தில் பயங்கர தீவிபத்து : கர்ப்பிணி உள்பட 20 பேர் சாவு
புதன் 10, டிசம்பர் 2025 8:45:58 AM (IST)

புதின் வருகை எதிரொலி : இந்திய அரிசிக்கு வரியை இரட்டிப்பாக டிரம்ப் பரிசீலனை!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 10:27:29 AM (IST)

எலான் மஸ்க் நிறுவனத்துக்கு ரூ.1,250 கோடி அபராதம்: ஐரோப்பிய ஆணையம் நடவடிக்கை
சனி 6, டிசம்பர் 2025 4:43:51 PM (IST)

இஸ்ரேல் வீரர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி நிச்சயம் : பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை!
வியாழன் 4, டிசம்பர் 2025 5:39:34 PM (IST)


.gif)