» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மும்பை நகர் முழுவதும் தீவிர கண்காணிப்பு: 34 கார்களில் மனித வெடிகுண்டுகள் ஊடுருவல்?
வெள்ளி 5, செப்டம்பர் 2025 5:44:05 PM (IST)
மும்பை நகரில் பல வாகனங்களில் 34 மனித குண்டுகள் ஊடுறுவி இருப்பதாக போக்குவரத்து காவல்துறையின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததால் நகரம் முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மும்பையில் 2008ம் ஆண்டு ஊடுருவிய 10 தீவிரவாதிகள் நகரின் பல்வேறு இடங்களிலும் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 160+ மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர். இந்தியாவில் நடந்த மிக மோசமான தீவிரவாதத் தாக்குதல்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
இதற்கிடையே மும்பை நகரில் பல வாகனங்களில் 34 மனித குண்டுகள் ஊடுறுவி இருப்பதாக போக்குவரத்து காவல்துறையின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளது. அதில் வாகனங்களில் 34 மனித வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் ஒட்டுமொத்த மும்பையும் அதிரும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மெசேஜ்ஜை அனுப்பியவர்கள் தங்களை "லஷ்கர்-இ-ஜிஹாதி" என்று கூறிக் கொண்டுள்ளனர்.
இதற்காக 14 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைந்துள்ளதாகவும், 400 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிக்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், இதனால் ஒரு கோடி பேர் கொல்லப்படுவார்கள் என்றும் அந்த மிரட்டல் செய்தியில் கூறப்பட்டிருந்தது. இந்த மெசேஜ் தொடர்பாக அனைத்துக் கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த மெசேஜ்ஜை அனுப்பியது யார் என்பதைக் கண்டறியும் முயற்சியிலும் போலீசார் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து மூத்த மும்பை காவல்துறை அதிகாரி கூறுகையில், "இது ஒரு வெறும் வதந்தி போல் தோன்றினாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகரத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எந்த அச்சுறுத்தலையும் சமாளிக்க நமது பாதுகாப்புப் படையினர் தயாராக இருக்கிறது. நாங்கள் அனைத்துத் தடுப்பு நடவடிக்கைகளையும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறோம். பார்கிங், பேஸ்மெண்ட் என அனைத்து இடங்களிலும் சோதனை செய்து வருகிறோம். ஒரு இடத்தையும் விடாமல் கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வந்துள்ளோம்" என்றார். அதேநேரம் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.
இந்தியாவிலேயே மகாராஷ்டிரத் தலைநகர் மும்பையில் தான் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. அங்கு மொத்தம் 10 நாட்கள் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும். நாளை தான் விநாயகர் சிலைகளை அங்கு ஆற்றில் கரைப்பார்கள்.. இந்த விழாவுக்காகப் பல ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 12 கூடுதல் காவல் ஆணையர்கள், 40 துணை ஆணையர்கள், 61 உதவி ஆணையர்கள், 3,000 அதிகாரிகள் மற்றும் 18,000 போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
மறுபுறம் மகாராஷ்டிராவில் சமீப காலங்களாகவே இதுபோல தீவிரவாத மிரட்டல் வருவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தானே ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சோதனை நடத்தினர். இருப்பினும், விசாரணையில் அது போலி வெடிகுண்டு மிரட்டல் என தெரிய வந்தது. இது தொடர்பாக 43 வயதான ஒருவரையும் போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஒப்பந்த செவிலியர்களின் உழைப்பை தமிழக அரசு சுரண்டுகிறது: உச்சநீதிமன்றம் கண்டனம் !
திங்கள் 15, செப்டம்பர் 2025 4:56:10 PM (IST)

ஜிஎஸ்டி 2.0 மூலம் வரி குறையும் பொருட்கள் பட்டியல் : புத்தகத்தை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 11:47:56 AM (IST)

வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் பொறியாளர்கள் முக்கிய பங்கு: பிரதமர் வாழ்த்து
திங்கள் 15, செப்டம்பர் 2025 11:32:03 AM (IST)

மிசோரம் மாநிலத்தின் முதல் ரயில் பாதை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
சனி 13, செப்டம்பர் 2025 12:51:08 PM (IST)

ஜக்கி வாசுதேவ் போன்ற போலி வீடியோ உருவாக்கி பெண்ணிடம் ரூ.3.75 கோடி நூதன மோசடி!
சனி 13, செப்டம்பர் 2025 12:30:17 PM (IST)

தேர்தல் வருவதால் பிரதமருக்கு மணிப்பூர் நினைவுக்கு வந்துள்ளது: கனிமொழி விமர்சனம்
சனி 13, செப்டம்பர் 2025 12:06:12 PM (IST)
