» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
டெல்லியில் சுதா எம்.பியிடம் நகை பறிப்பு: பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என குற்றச்சாட்டு!
திங்கள் 4, ஆகஸ்ட் 2025 4:12:58 PM (IST)

தலைநகர் டெல்லியில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை உள்ளது. நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று காங்கிரஸ் எம்.பி சுதா கூறினார்.
டெல்லியில் நடைபயிற்சி சென்ற போது காங்கிரஸ் எம்.பி சுதாவிடம் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக அமித்ஷாவுக்கு சுதா எம்.பி கடிதம் எழுதியுள்ள நிலையில், செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: டெல்லியில் மிகவும் பாதுகாப்பான பகுதியாக இருக்கக்கூடிய தூதரகங்கள் அமைந்துள்ள பகுதியில் காலை நடை பயிற்சி மேற்கொண்ட போது மர்ம நபர் ஒருவர் வாகனத்தில் வந்து, என்னிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு சர்வ சாதாரணமாக எந்த பதட்டமும் இல்லாமல் சென்றார்
இந்த சம்பவம் நடைபெற்ற போது அந்த பகுதியில் ஒரு போலீசார் கூட பாதுகாப்பு பணியில் ரோந்து பணியிலோ இல்லை சற்று நேரத்திற்கு பின்பாக அந்த பகுதியில் இருந்து பணியில் வந்த போலீசாரிடம் செயின் பறிப்பு சம்பவம் தொடர்பாக தெரிவித்தோம் ஆனால் தங்களுடைய நீங்கள் காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள் என்று மட்டுமே தெரிவித்தனர்
இந்த சம்பவத்தால் ஒன்று மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது இவ்வளவு பாதுகாப்பான தூதரகங்கள் அமைந்திருக்கக் கூடிய பகுதியில் இதுபோன்ற ஒரு செயின் பறிப்பு சம்பவம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு நடைபெற்றிருக்கிறது என்றால் இந்த நாட்டில் பிற பெண்கள் இதுபோன்று செல்லும்போது அவர்களுக்கு எதிரான கொடுமை எப்படி இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
காவல்துறையினரும் அலட்சிய போக்கு உடனே நடந்து கொண்டனர் என்பது வேதனைக்குரியது. இந்த சம்பவம் தொடர்பாக மக்களை சபாநாயகர் இடம் புகார் அளித்துள்ளோம். மேலும் இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்திலும் எழுப்புவோம். நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. தலைநகர் டெல்லியில் இரட்டை இன்ஜின் அரசாங்கம் இருந்த போதும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை இருந்து கொண்டிருக்கின்றது" என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரதமர் மோடியுடன் துரை வைகோ சந்திப்பு
திங்கள் 4, ஆகஸ்ட் 2025 5:25:39 PM (IST)

அரசு திட்டங்களில் முதல்வர் பெயருக்கு தடை: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல்!
திங்கள் 4, ஆகஸ்ட் 2025 12:24:47 PM (IST)

ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் ஷிபு சோரன் காலமானார்
திங்கள் 4, ஆகஸ்ட் 2025 10:35:59 AM (IST)

கற்பழிப்பில் இருந்து தப்பிக்க வீட்டிலேயே இருங்கள்: போலீசாரின் விழிப்புணர்வு போஸ்டரால் சர்ச்சை!!
ஞாயிறு 3, ஆகஸ்ட் 2025 10:39:02 AM (IST)

சத்தீஷ்காரில் கைதான கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்: கேரள அரசியல் கட்சியினர் வரவேற்பு
சனி 2, ஆகஸ்ட் 2025 5:41:33 PM (IST)

பெங்களூரில் ரூ.5 லட்சம் கேட்டு மாணவன் கடத்தி கொலை : 2 பேரை சுட்டுபிடித்த போலீஸ்!
சனி 2, ஆகஸ்ட் 2025 5:04:03 PM (IST)
