» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

டிசிஎஸ் நிறுவனத்தில் 12ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்க விவகாரம்: கர்நாடக அரசு நோட்டீஸ்!

சனி 2, ஆகஸ்ட் 2025 3:19:47 PM (IST)



டாடா கன்​சல்​டன்ஸி சர்​வீசஸ் (டிசிஎஸ்) நிறு​வனத்​தில் 12,000 ஊழியர்​கள் பணி நீக்​க விவகாரம் தொடர்​பாக அந்த நிறு​வனத்​துக்கு கர்​நாடக அரசு நோட்​டீஸ் அனுப்​பி​யுள்​ளது.

இந்​தி​யா​வின் மிகப்​பெரிய தகவல் தொழில்​நுட்ப சேவை நிறு​வனங்​களில் ஒன்​றான டாடா கன்​சல்​டன்ஸி சர்​வீசஸ் நிறு​வனம் 2026-ம் நிதி​யாண்​டில் தங்​களது நிறு​வனத்​தில் 2 சதவீத பணி​யாளர்​களை குறைக்க முடி​வெடுத்​துள்​ளது. இதன் விளை​வாக 12 ஆயிரத்து 200 ஊழியர்​கள் வேலை இழக்க நேரிடும் என அந்த நிறு​வனம் தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்து கர்​நாடக தொழிலாளர் நலத்​துறை அமைச்​சர் சந்​தோஷ் லாட் கூறும்​போது, "டிசிஎஸ் நிறு​வனத்​தின் திடீர் முடிவு அதிர்ச்சி அளிக்​கிறது. 12 ஆயிரம் ஊழியர்​கள் என்​பது மிக​வும் பெரிய எண்​ணிக்​கை. இதனை தடுத்து நிறுத்​து​வது தொடர்​பாக அதி​காரி​களு​டன் ஆலோ​சனை நடத்​தி​யுள்​ளேன்.

தொழிலா​ளர் நலத்​துறை அதி​காரி​கள், டிசிஎஸ் நிறு​வனத்​தின் உயர் அதி​காரி​களு​டன் பேச்​சு​வார்த்தை நடத்​தி​யுள்​ளனர். இதுத​விர, அந்த நிறு​வனத்​துடன் பேச்​சு​வார்த்தை நடத்​து​வதற்​காக நோட்​டீஸ் அனுப்​பி​யுள்​ளோம். தொழிலா​ளர் நல சட்​டத்​தின்​படி உரிய நடவடிக்கை எடுக்​கப்​படும்” என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory