» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அரவிந்த் கேஜரிவால் இடைக்கால ஜாமீன் மனு ஒத்திவைப்பு : உச்ச நீதிமன்றம் உத்தரவு

செவ்வாய் 7, மே 2024 5:17:32 PM (IST)

டெல்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்படிருக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சார்பில் இடைக்கால ஜாமீன் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

அரவிந்த கேஜரிவாலுக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத் துறை சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், இடைக்கால ஜாமீன் வழங்காமல், நாளை மறுநாள் அல்லது அடுத்த வாரத்தில் இந்த வழக்குப் பட்டியலிடப்படும் என்று நீதிபதிகள் கூறிவிட்டனர்.

அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குடன், அரவிந்த் கேஜரிவால் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கேஜரிவால் மற்றும் அமலாக்கத் துறை தரப்பில் காரவாத வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அரவிந்த் கேஜரிவாலுக்கு ஜாமீன் வழங்கினால் அவர் முதல்வர் பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படும் என்று கருத்துத் தெரிவித்து வழக்கின் அடுத்த விசாரணையை நாளை மறுநாளைக்கு ஒத்திவைப்பதாகத் தெரிவித்துள்ளது.

ல்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கேஜரிவாலை அமலாக்கத் துறை கடந்த மார்ச் 21-ஆம் தேதி கைது செய்தது. தற்போது நீதிமன்றக் காவலில் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, கைது நடவடிக்கைக்கு எதிராக கேஜரிவால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த போது இரு தரப்பிலும் காரசார வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து இடைக்கால ஜாமீன் வழங்காத உச்ச நீதிமன்றம், விசாரணையை ஒத்திவைத்துள்ளது.

முன்னதாக, அரவிந்த் கேஜிரிவாலின் நீதிமன்றக் காவலை மே 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை நடைபெற்ற விசாரணையின்போது, இந்த வழக்கில் மக்களவைத் தோ்தலுக்கு முன்பாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டது ஏன் என்பது உள்பட 5 கேள்விகளை அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் எழுப்பியிருந்தது.

அப்போது, அமலாக்கத்துறை சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி.ராஜுவிடம் நீதிபதிகள் அமா்வு, ‘கேஜரிவாலின் கைதுக்கு எதிரான மனு மீதான விசாரணைக்கு கால அவகாசம் தேவைப்படுவதாகவும், இதனால், அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து அமலாக்கத் துறையின் வாதத்தைக் கேட்க பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்ததது.

அதற்கு அரவிந்த் கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவதை எதிா்த்து வாதிடப்போவதாக எஸ்.வி. ராஜு நீதிபதிகளிடம் கூறினாா். அதற்கு நீதிபதிகள், ‘‘நாங்கள் இடைக்கால ஜாமீன் குறித்து விசாரிக்க உள்ளோம் என்றுதான் கூறுகிறோம். ஜாமீன் வழங்கலாம் அல்லது வழங்காமல் இருக்கலாம்’’ என்று கூறினா். இதையடுத்து, மே 7-ஆம் தேதி விசாரணையை ஒத்திவைப்பதாகக் கூறிய நீதிபதிகள் அன்றைய தினம் இடைக்கால ஜாமீன் மனு மீதான வாதங்களுக்கு தயாராக வருமாறு எஸ்.வி. ராஜுவை உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory