» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் புகார் : மெளனம் கலைத்த தேவகவுடா கருத்து!
சனி 18, மே 2024 4:47:28 PM (IST)

பிரஜ்வல் ரேவண்ணா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவர் மீது நடவடிக்கை எடுப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என, அவரது தாத்தாவும், மஜத தலைவருமான தேவகவுடா கூறியுள்ளார்.
மஜத தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா பேரன் பிரஜ்வல் ரேவண்ணா (33) மீதான ஆபாச வீடியோ வழக்கை மாநில சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் தேவகவுடா எந்த கருத்தும் கூறாமல் மவுனமாக இருந்தார்.
இந்நிலையில், தற்போது முதல் முறையாக இந்த விவகாரத்தில் மவுனம் கலைத்த தேவகவுடா நிருபர்களிடம் கூறியதாவது: பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளதால், அது குறித்து கருத்துக் கூற விரும்பவில்லை. அவர் வெளிநாடு சென்றுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக கட்சி சார்பாகவும், குடும்பம் சார்பாகவும் குமாரசாமி பேசியுள்ளார். சட்டத்தின்படி நடவடிக்கை எடுப்பது மாநில அரசின் கடமை.
பாலியல் துன்புறுத்தல் வழக்கில் பலருக்கு தொடர்பு உள்ளது. அவர்களின் பெயரை கூற விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணம் கிடைக்க வேண்டும் என குமாரசாமி கூறியுள்ளார்.
குற்றவாளி எனும் போது பிரஜ்வல் மீது நடவடிக்கை எடுப்பதில் ஆட்சேபனை இல்லை. ஆனால், ரேவண்ணா மீதான குற்றச்சாட்டுகள் குறித்தும், அவர் மீதான வழக்கு எப்படி பதியப்பட்டது என்பது குறித்தும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உத்தராகண்டைத் தொடர்ந்து குஜராத்: பொது சிவில் சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றம்
வியாழன் 26, மார்ச் 2026 12:19:21 PM (IST)

வந்தே மாதரம்: மத்திய அரசின் சுற்றறிக்கைக்கு எதிரான மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி!
புதன் 25, மார்ச் 2026 5:00:52 PM (IST)

கடும் போர் சூழலிலும் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை: பிரதமர் உறுதி!
செவ்வாய் 24, மார்ச் 2026 5:23:08 PM (IST)

ரஷ்யாவிலிருந்து 7 கச்சா எண்ணெய் கப்பல்கள், அமெரிக்காவிலிருந்து சமையல் எரிவாயு வருகை!
திங்கள் 23, மார்ச் 2026 12:49:55 PM (IST)

இந்திய அரசியலில் நீண்ட காலம் அரசுத் தலைவராகப் பதவி வகித்து பிரதமர் மோடி புதிய சாதனை!
ஞாயிறு 22, மார்ச் 2026 1:19:54 PM (IST)

பெண் மருத்துவர் வந்தனா தாஸ் கொலை வழக்கு: பள்ளி ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
சனி 21, மார்ச் 2026 4:52:35 PM (IST)

