» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ராகுலை பிரதமர் ஆக்குவதே சோனியாவின் ஒரே குறிக்கோள்: அமித்ஷா குற்றச்சாட்டு

சனி 9, மார்ச் 2024 5:12:24 PM (IST)

காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர்களுக்கு தங்கள் குடும்பங்களின் நலனே குறிக்கோள் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டினார்.

பீகார் மாநிலம் பாட்னாவின் பாலிகஞ்ச் பகுதியில் பா.ஜனதா கட்சியின் பேரணி நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசும் போது கூறியதாவது: காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர்கள் எப்போதும் தங்கள் குடும்பங்களின் நலனுக்காக உழைக்கின்றனர், ஆனால் ஏழைகளுக்காக எதையும் செய்யவில்லை. 

ஏழைகளுக்கு நல்லது செய்ய பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதாவால் மட்டுமே முடியும். "காங்கிரசின் உயர்மட்டத் தலைவர்கள் எப்போதும் தங்கள் குடும்பங்களை கவனித்துக்கொள்கிறார்கள், லாலுவும் தனது முழு வாழ்க்கையையும் தனது குடும்பத்திற்காகவே வாழ்ந்தார். சோனியா காந்தியின் ஒரே குறிக்கோள் ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும், அதே நேரத்தில் தனது மகனை முதலமைச்சராக்க வேண்டும் என்பதே லாலுவின் நோக்கம் என்றார்.


மக்கள் கருத்து

ஆமாMar 11, 2024 - 03:21:02 PM | Posted IP 162.1*****

அது மட்டுமல்ல ஸ்டாலின் குடும்பங்களும் கூட

unmaiMar 11, 2024 - 04:05:37 AM | Posted IP 172.7*****

what is your problem.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory