» சினிமா » செய்திகள்

சிறை பட வெற்றிக்குத் தமிழ் ரசிகர்களே காரணம்: இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு

சனி 14, மார்ச் 2026 11:23:29 AM (IST)



எஸ்.எஸ். லலித்குமார் தயாரிப்பில், சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள 'சிறை' படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட இயக்குநர் வெற்றிமாறன், படத்தின் வெற்றிக்காகத் தமிழ் ரசிகர்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்தார்.

விக்ரம் பிரபு, எல்.கே. அக்ஷய்குமார், அனிஷ்மா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான 'சிறை' திரைப்படம் கடந்த ஆண்டின் இறுதியில் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படம், திரையரங்கு வெற்றியைத் தொடர்ந்து ஓடிடி (OTT) தளத்திலும் வெளியாகிப் பரவலான கவனத்தைப் பெற்றது. இப்படத்தின் வெற்றியைப் படக்குழுவினர் சென்னையில் கேக் வெட்டிக் கொண்டாடினர். 

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது: சிறை திரைப்படத்தைத் தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்ட விதம் மிகவும் சிறப்பானது. மற்ற மொழிகளில் இந்தப் படம் வெளியாகி இருந்தால், இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றிருக்குமா என்பது சந்தேகமே. தமிழ் சினிமாவில் மட்டும்தான் இது போன்ற புதிய முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. தரமான படங்களுக்காக எடுக்கப்படும் சிறிய முயற்சிகளையும் தமிழ் ரசிகர்கள் அடையாளம் கண்டு, எப்போதும் ஆதரவு அளிக்கிறார்கள்."என்று அவர் தெரிவித்தார்.

தமிழ் சினிமா ரசிகர்கள் குறித்து வெற்றிமாறன் முன்வைத்த இந்தக் கருத்து, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory