» சினிமா » செய்திகள்

சேரி என்ற கருத்திற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன்: குஷ்பு திட்டவட்டம்!

சனி 25, நவம்பர் 2023 4:33:35 PM (IST)

சேரி என்று பேசியதற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று   தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். 

சென்னை விமான நிலையத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் நடிகை குஷ்பு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: மணிப்பூர் சம்பவத்திற்காக முதலில் குரல் கொடுத்தது நான்தான். இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என எப்படி சொல்வீர்கள்?

என்னுடைய டுவீட்டில் தெளிவாகவே நான் கூறியுள்ளேன். சேரி என்பதை நான் எந்த அர்த்தத்திலும் சொல்லவில்லை. இதுவரை நான் தரம் குறைந்த வார்த்தைகளைப் பயன்படுத்தியதில்லை. புரிந்து கொள்ளாதவர்களை பற்றி நான் என்ன செய்ய முடியும்? வேளச்சேரி, செம்மஞ்சேரி பெயர்களில் உள்ள அர்த்தம் என்ன? அரசாங்க கோப்புகளிலேயே சேரி என்ற வார்த்தை இருக்கிறது திரவுபதி முர்மு குடியரசு தலைவராக பொறுப்பேற்ற போது காங்கிரஸ் கட்சியினர் சொன்னது என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory