» சினிமா » செய்திகள்

பங்காரு அடிகளார் மறைவு: கவிஞர் வைரமுத்து இரங்கல்!

வெள்ளி 20, அக்டோபர் 2023 8:25:57 PM (IST)

மேல்மருவத்தூர் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் கவிதை வருமாறு

சமய பீடத்தைச் சமுதாய பீடமாய் மாற்றியவர்

அடித்தட்டு மக்களுக்கு அடைத்துக் கிடந்த ஆன்மிகக் கதவுகளை எளியவர்க்கும் மகளிருக்கும் திறந்துவிட்டவர்

இறுகிக் கிடந்த ஆன்மிக முடிச்சுகளைத் தளர்த்தியவர் மற்றும் அறுத்தவர்

சமயப் பொதுவுடைமையாளர் பங்காரு அடிகளார் மறைவால் துயரமுறும் அத்துணை இதயங்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்

பீடம் கண்டவரின் பீடு புகழ் நீடு நிலவட்டும்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory